பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சினிமாத் துறையில் சிலர்தான் இப்படி: தனுஷை புகழ்ந்த நடிகை ராதிகா! 

நடிகை ராதிகா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் நடிகர் தனுஷ் குறித்து புகழ்ந்து பதிவிட்டுள்ளார். 

Published On :

கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தற்போதும் முக்கியமான கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்து வருகிறார்.  

Story image

சினிமா மட்டுமின்றி சீரியலையும் தயாரிக்கும் நடிகை ராதிகா, நடிகர் சரத்குமாரை பிப்ரவரி 2001இல் திருமணம் செய்தார். தற்போது ராதிகா சரத்குமார் புதிய வீடு ஒன்றினை கட்டி சமீபத்தில் குடி புகுந்தார்கள். இதற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் மீனா, தனுஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

Story image

இது குறித்து ராதிகா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “சினிமாத்துறையில் சிலர்தான் இப்படி சிறப்பான உறவுடன் பழகுவார்கள். இதில் தனுஷும் ஒருவர்” எனப் பதிவிட்டுள்ளார்.

Story image

5 வாரங்கள் முன்பு ராதிகா சினிமா துறையில் 45 ஆண்டுகளை நிறைவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. 

தனுஷுடன் நடிகை ராதிகா தங்க மகன் படத்தில் அம்மாவாக நடித்திருந்தார்.

Story image

தனுஷ் கேப்டன் மில்லர் படப்பிடிப்பினை முடித்து தற்போது தனது 50வது படத்தினை தானே இயக்கி நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.