அதிக டிஆர்பியில் வானத்தைப்போல! ஒளிபரப்பு நேரம் அதிகரிப்பு!!

அதிக டிஆர்பி மற்றும் மக்களிடம் கிடைத்த அதீத வரவேற்பின் காரணமாக அரைமணிநேரத்திலிருந்து ஒருமணிநேரம் ஒளிபரப்பாகவுள்ளது. 
அதிக டிஆர்பியில் வானத்தைப்போல! ஒளிபரப்பு நேரம் அதிகரிப்பு!!
Published on
Updated on
1 min read


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல தொடர் இனி ஒருமணிநேரம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிக டிஆர்பி மற்றும் மக்களிடம் கிடைத்த அதீத வரவேற்பின் காரணமாக அரைமணிநேரத்திலிருந்து ஒருமணிநேரம் ஒளிபரப்பாகவுள்ளது. 

திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் வானத்தைப் போல தொடர் பலதரப்பட்ட ரசிகர்களைக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு 8 - 8.30 வரை ஒளிபரப்பான நிலையில், இனி 8 - 9 மணிவரை ஒளிபரப்பாகவுள்ளது.

அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தத் தொடர், திருமணம் ஆன பிறகு அண்ணன், தங்கை உறவு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவரிக்கிறது. ஸ்ரீகுமார், மான்யா, அஷ்வந்த் கார்த்தி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் டாப் 5 தொடர்களில் ஒன்றாக உள்ளது. கடந்த வாரம் 9.53 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 3வது இடத்தில் இருந்தது. முதலிடத்தில் எதிர்நீச்சல் தொடரும், இரண்டாவது இடத்தில் கயல் தொடரும் உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com