இயக்குநர் ஹரி இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சௌத் இணைந்து தயாரிக்கும் படத்தில் நாயகனாக விஷால் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.
‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்துள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு விஷால் - ஹரி இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இன்று ரத்னம் வெளியானது.
இந்நிலையில் இயக்குநர் ஹரி பேசிய விடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
இயக்குநர் ஹரி பேசியதாவது:
நான் எங்கேயும் என்னை முழு நேரப் படைப்பாளி என அடையாளப்படுத்தியது கிடையாது. நான் செமி (பாதி) - கிரியேட்டர்தான். பாதி என்னுடைய படைப்பு. மீதி எல்லாமே சமாளிபிக்கேஷன்தான். நல்ல நடிகர், நடிகை, காமெடியனை வைத்து செய்வதுதான் அந்த சமாளிபிகேஷன். கொஞ்சம் படித்துவிட்டு 60 மார்க் வாங்கும் சுமாரான மாணவன் நான். 100 மார்க் வாங்க வேண்டுமென நினைத்ததில்லை. 60 மார்க் வாங்கினால் போதுமென நினைப்பவன் என கலகலப்பாக பேசியுள்ளார்.