‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஏ.ஆர்.ரஹ்மானிடம் வந்தே மாதரம் பாடல் பாடிய வெளிநாட்டு ரசிகை: வைரல் விடியோ!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் வெளிநாட்டு ரசிகை ஒருவர் வந்தே மாதரம் பாடலை பாட்டிக்காட்டுவார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Published On :

திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான அயலான் படத்துக்கு ரஹ்மான்தான் இசையமைத்துள்ளார். அடுத்து வெளியாகவுள்ள லால் சலாம் படத்துக்கும் இசையமைத்துள்ளார். 

துபையில் ரசிகை ஒருவர் காரில் அமர்ந்திருக்கும் ரஹ்மானிடம் வந்தே மாதரம் பாடலை பாடிக் காட்ட அனுமதி கேட்பார். ரஹ்மானும் சம்மதிக்க அவர் சிறப்பாக பாடிக்காட்டுவார். ரஹ்மானும் அதை விடியோவாக படம் பிடித்துள்ளார். இந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைராகியுள்ளது. 

பாடகி செலினெடி மாதாஹரி

பாடகி செலினெடி மாதாஹரி

துபையில் பிறந்த இந்தோனோஷியாவைச் சேர்ந்த இந்தப் பாடகி செலினெடி மாதாஹரி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த விடியோவை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 

இவர் ஏற்கனவே, நான்கு நாள்களுக்கு முன்பாக அயலான் பட புரமோஷன் அன்று நடிகர் சிவகார்த்திகேயனுடனும் தமிழ்ப் பாடலை பாடி விடியோவினை பகிர்ந்துள்ளார். 

பாடல்களுக்காக பல விருதுகள் வாங்கியுள்ள புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது தமிழ், இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.