ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு: முக்கிய தொடர்களின் நேரம் மாற்றம்!

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்ததால், முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

Published On :

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்ததால், முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜன. 14 ஆம் தேதி நிறைவடைந்தது. அதிகவாக்குகள் பெற்று அர்ச்சனா இப்போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், மணிச்சந்திரா 2 ஆம் இடத்தையும், மாயா 3 ஆம் இடத்தையும்,  பெற்றனர்.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு சின்ன மருமகள் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல், பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நீ நான் காதல் தொடர், இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தங்கமகள் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்த நடிகை அஸ்வினி நடிக்கிறார். 

இந்த தொடர்களின் ஒளிபரப்பு நேரம் ஜனவரி 22 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், கலைஞர் தொலைக்காட்சியில் நடிகை சுஜிதா நடிக்கும் கெளரி என்ற புதிய தொடரும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கும் நினைத்தேன் வந்தாய் என்ற புதிய தொடரும் ஜன. 22 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.