கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எப்படி இருக்கிறது இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது'? - திரை விமர்சனம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது பட விமர்சனம் 

News image
Updated On :31 ஆகஸ்ட் 2022, 4:44 pm

எஸ். கார்த்திகேயன்

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காதலின் பல்வேறு பரிமாணங்களைப் பேசுகிறது இந்தப் படம். காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சமூகத்தில் தவறாக அர்த்தம்கொள்ளப்படும் வார்த்தைகளான காதல், ஒரு தலைக் காதல், தன் பாலின ஈர்ப்பு, திருநங்கை, ஆணவப் படுகொலை ஆகியவற்றைப் பற்றி விரிவாக அலசுகிறது இந்தப் படம்.

புதுச்சேரியைச் சார்ந்த நாடகக் குழு ஒன்றில் காதல் குறித்து நாடகம் ஒன்றை உருவாக்க திட்டமிடப்படுகிறது. இதற்காக குழுவில் உள்ளவர்கள் தற்காலிக காதல் குறித்து விவாதம் செய்கிறார்கள். உரையாடல்கள் தான் படமே. 

ஒரு காட்சியில் துஷாரா, ''நாம் எல்லோருமே சரியானவர்கள் அல்ல, தவறுகள் செய்துதான் மேம்பட்ட நிலையை அடைந்திருப்போம், வாழ்க்கை முழுக்க கற்றுக்கொண்டே தான் இருக்கப்போகிறோம்'' என ஒரு வசனம் பேசுவார். இப்படி படம் முழுக்க பல வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. 

படத்தின் தன்மையினால் மிக மெதுவாக நகர்வது போல ஒரு எண்ணம் தோன்றலாம். அலுவலகங்களில், பொதுவெளிகளில் பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை இன்றளவும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுவாக முற்போக்காக சிந்திக்கும் நாம்கூட நமக்கென வரும்போது சுயநலமாக முடிவெடுப்போம். இப்படி பல விஷயங்களை இந்தப் படம் அலசுகிறது. 

உதாரணமாக பெண்களின் விருப்பம் இல்லாமல் அணுகக்கூடாது என அறிவுரை சொல்லும் ஒரு கதாபாத்திரம், மது அருந்தாத நபரைக் கட்டாயப்படுத்தும்போது அவர் நோ மீன்ஸ் நோ என்பார். இப்படி முரண்களுடன் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. 

இளையராஜாவின் பாடல்கள் படம் நெடுக இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே வெற்றிபெற்ற இசையமைப்பாளர் தென்மாவின் பாடல்கள் படத்தில் மிக சுவாரசியமாக படமாக்கப்பட்டுள்ளன. கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளை நேரடியாக பார்க்கும் உணர்வைத் தருகிறது. 

சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசுவதோடு ஒரு சராசரி குடும்பத்தில் சாதி எவ்வளவு தூரம் வேரூன்றி இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக இயக்குநர் பா.ரஞ்சித் பதிவு செய்திருக்கிறார். படம் முடித்து வெளியே வரும்போது ஒரு நிமிடம் நம்மை நாமே பரிசோதித்துக்கொள்வது உறுதி. அந்த அளவுக்கு ஒவ்வொரு கதாப்பாத்திரமும் சமூகத்தில் பலதரப்பட்ட மக்களை பிரதிபலிப்பதாக உள்ளது. 

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தவிருக்கும் தமிழ் சினிமாவின் முக்கியப் பதிவு நட்சத்திரம் நகர்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.