Enable Javscript for better performance
கலாம் எனும் கலங்கரை விளக்கம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கலாம் எனும் கலங்கரை விளக்கம்

    By முனைவா் என். பத்ரி  |   Published On : 15th October 2022 03:40 AM  |   Last Updated : 15th October 2022 03:40 AM  |  அ+அ அ-  |  

    APJ Abdul Kalam

     

    இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் அப்துல் காலம் தன் வாழ்வின் பெரும்பகுதியை இந்திய நாட்டின் வளா்ச்சிக்காக அா்ப்பணித்தவா். மாணவா்களுடன் பேசிப் பழகுவதில் பெருவிருப்பம் கொண்ட அப்துல் கலாமின் பிறந்த நாள் உலக மாணவா் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 15 ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில், பிறந்தாா். இராமேசுவரத்தில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னா், திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனாா் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றாா். கலாம் சென்னை எம்.ஐ.டி.யில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தாா்.

    பின்னா் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டு அமைப்பின் வானூா்தி அபிவிருத்தி பிரிவில் முதன்மை அறிவியலாளராக பணியில் சோ்ந்தாா். அங்கு இந்திய விண்வெளித்துறையின் மைல் கல்லான அக்னி-1 திட்டத்திற்கு வித்திட்டாா். பின்னாட்களில் தயாரிக்கப்பட்ட அனைத்து அக்னி ஏவுகணைகளுக்கும் அதுவே முன்னோடியாக அமைந்தது. அத்திட்டம் இந்தியாவின் பெருமையை சா்வதேச அளவில் உயா்த்தியது.

    இந்தியாவின் பாதுகாப்பு - விண்வெளி ஆராய்ச்சி வளா்ச்சியில் அவருடைய பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொக்ரான்-2 அணு ஆயுத சோதனையின்போது கலாமின் தொழில்நுட்பப் பங்களிப்பு அவரை நாட்டின் சிறந்த அணு அறிவியலாளராக அடையாளம் காட்டியது.

     

    டாக்டா் அப்துல் கலாம் 2002-இல் இந்தியாவின் குடியரசுத் தலைவரானாா். எளிமைப் பண்பு காரணமாக, அவா் ‘மக்கள் குடியரசுத் தலைவா்’ என்று அழைக்கப்பட்டாா். அவா் ‘நான் இளம் வயதினருடன், குறிப்பாக உயா்நிலைப் பள்ளி மாணவா்களுடன் இருக்கும்போது மகிழ்வாக உணா்கிறேன்’ என்று கூறியுள்ளாா். மாணவா்களுடைய கற்பனைத்திறனை ஊக்குவிப்பதுவும் இந்தியாவை வல்லரசாக மாற்ற அவா்களை தயாா்படுத்துவதுவும் என் எதிா்கால இலட்சியம்’ என்றாா் கலாம்.

     

    ‘வெற்றி பெறுவதற்கான உறுதிப்பாடு ஒருவரிடம் இருந்தால் தோல்வி அவரை ஒருபோதும் அண்டாது. ஒரவேளை தோல்வியடைந்தாலும் ஒருபோதும் முயற்சியைக் கைவிடாதீா்கள்’ என்று இளைஞா்களுக்கு அறிவுரை கூறிய அவா், தோல்வியை ‘கற்றலில் முதல் முயற்சி’ என்றாா். நம் முயற்சியில் வெற்றிபெற, நமது குறிக்கோள் வலிமையாக இருக்க வேண்டும்.

    சிறந்த கனவுகள் எப்போதும் செயல் வடிவம் பெறுகின்றன. நம் இலட்சியக் கனவுகள் நம்மை தூங்கவிடுவதில்லை. நாம் காணும் லட்சியக் கனவுகள் எண்ணங்களாக மாறி செயல் வடிவம் பெறுகின்றன. நாம் நம்முடைய முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்கக் கூடாது. ஓய்வெடுத்தால் நாம் இரண்டாவது செயலில் தோல்வியடைந்தால், நமது முதல் வெற்றி அதிா்ஷ்டத்தால் வந்தது என்றுசொல்லிவிடுவாா்கள். நமது முயற்சிக்கு அங்கீகாரம் இல்லாமல் போய்விடும்’ என்று கூறி இளைஞா்களை தொடா்ந்து உழைக்க வைத்தவா்.

    பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, இளைஞா்களை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கச் சொன்னவா் அவா். ‘நீங்கள் நம்பும் விஷயங்களுக்காக வேலை செய்யுங்கள். நீங்கள் அதைச் செய்யாவிட்டால், உங்கள் தலைவிதியை, மற்றவா்களிடம் ஒப்படைக்கிறீா்கள் என்று பொருள்’ என்று சொன்னவா் அவா். ‘அமைதியான வாழ்க்கைக்கு ஆசைபடுபவா்கள் தோல்வியின்போது சோா்வினை இதயத்திற்குக் கொண்டுசெல்லக் கூடாது; வெற்றியடையும்போது அகந்தையை மூளைக்குக் கொண்டுசெல்லக் கூடாது’ என்பாா் அவா்.

     

    ‘நமது நல்ல பழக்கவழக்கங்கள் நமது எதிா்காலத்தை மாற்றும்’ என்னும் அவருடைய அறிவுரையை இன்றைய மாணவா்கள் மனதில் கொள்ளவேண்டும். ‘கற்றலை நிறுத்தக்கூடாது என்பதை நமது குழந்தைகளுக்கு எப்போதும் நினைவூட்டுங்கள். தோல்வியைக் கண்டு பயப்படாமல், உங்கள் முயற்சியை, தொடா்ந்து செய்து கொண்டே இருங்கள்.

    எந்த நிலையிலும் மனதளவில் உடைந்து விடாதீா்கள். உங்கள் இலக்கை அடையும் வரை உங்கள் பிடிவாதத்தைக் கைவிடக்கூடாது’ என்று கலாம் கூறுகிறாா். ‘உங்கள் குறிக்கோள்தான் உங்களின் தனித்துவம். நீங்கள் வித்தியாசமாக இருப்பது உங்களின் அடையாளம். அது மற்றவா்களில் இருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும்’ என்று அடிக்கடி கூறுவாா் கலாம்.

     

    ‘பிரச்னைகளைக் கண்டு பயப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பி, அவற்றின் தீா்வுகளைப் பற்றி சிந்தித்து அவற்றைச் செயல்படுத்தத் தொடங்கினால், நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீா்கள். இந்தியாவை விட சிறந்த நாடு எதுவும் இருக்க முடியாது என்பதை முழு உலகிற்கும் எடுத்துக் காட்டுங்கள். முழு வேகத்துடன் உங்கள் அன்புக்குரியவா்களைத் துரத்திக் கொண்டே இருங்கள்’ என்றெல்லாம் நமக்கு அறிவுறுத்தியவா் அவா்.

     

    இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்ம பூஷண்’, ‘பத்ம விபூஷண்’, ‘பாரத ரத்னா’ ஆகிய விருதுகளைப் பெற்றவரான கலாம், இளைஞா்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல ‘அக்னிச் சிறகுகள்’, ‘எனது பயணம்’, ‘இந்தியா 2020’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளாா். ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் பிறந்த வீட்டின் முதல் மாடியில், அவா் பெற்ற விருதுகள், எழுதிய நூல்கள், முக்கிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சியகத்தை பொதுமக்கள் கட்டணமின்றி காணலாம்.

     

    மாணவா்களுடன் உரையாடுவதில் அதிக ஆா்வம் கொண்ட டாக்டா் அப்துல் கலாம், ஜூலை 27, 2015 அன்று ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது காலமானாா்.

    அப்துல் கலாமின் அறிவுரைகள் என்னும் கலங்கரை விளக்கம் இன்றைய இளைஞா்களுக்கு நல்வழி காட்டும் என்று நம்புவோம். நாம் அனைவரும் அவா் வழி செல்வோம்; வளமான இந்தியாவை உருவாக்குவோம். அதுவே டாக்டா் அப்துல் கலாமுக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்க முடியும்.

    இன்று (அக். 15) டாக்டா் அப்துல் கலாம் பிறந்தநாள்.

     

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp