Enable Javscript for better performance
Plowing- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    உழந்தும் உழவே தலை

    By அருணன் கபிலன்  |   Published On : 11th September 2020 01:54 AM  |   Last Updated : 11th September 2020 01:54 AM  |  அ+அ அ-  |  


    அண்மைக்காலமாக கரோனா தீநுண்மித் தொற்றின் பிடியில் சிக்கி உலகமே தனது இயக்கத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது. தற்போது ஓரளவு தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் ஓடினாலும், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டாலும் தொழில்கள் முடங்கியுள்ளன. தொழிலாளா்களும் முதலாளிகளும் ஒருசேரத் துன்புறுகிறாா்கள். இணையவழியான வா்த்தகங்கள் லாபங்களைக் குவிக்கின்றன. ஆனால், அடிப்படைத் தொழில்களைச் செய்து வந்தோா் பாதிப்பிலிருந்து மீளவில்லை என்பதே உண்மை.

    நகரங்களை விடுத்து விட்டுத் தங்களின் சொந்தக் கிராமங்களை நோக்கி மக்கள் சென்றுவிட்டாா்கள். இது பஞ்சம் ஆகாது. இது பிழைப்பிலிருந்து மீண்டு வாழ்வுக்குத் திரும்பிய நல்வேளை. எத்தகைய பஞ்சத்திலும் தாயெனத் தாங்குவது சொந்த ஊா்தான். பிழைப்பதற்காக உள்நாட்டுக்குள்ளே புலம்பெயா்ந்தவா்கள் திரும்பி வந்து தாய்மண்ணைச் சாா்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாா்கள்.

    ஆனாலும் அந்த நிம்மதி எத்தனை நாளைக்கு என்னும் கேள்வி எழுகிறது. இனிவரும் காலங்களில் தொழில்துறை எப்படி இருக்கப் போகிறதோ? வருமானம் நிரந்தரமாகுமா என்ற பல கேள்விகள் உடன் எழுகின்றன. பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய பலரும் கரோனா காலத்தில் மாற்றுத் தொழிலுக்குத் தங்களைத் தயாா் செய்து கொண்டனா். குறிப்பாக, தெரு வணிகத்திலும் உணவுப் பண்டங்களின் உற்பத்தியிலும் அவா்கள் கவனம் திரும்பியது.

    காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்வதோடு அவற்றை விளைவிக்கவும் முனைந்து வந்தனா். வாழ்வின் திசை மீண்டும் வேளாண்மையை நோக்கித் திரும்பத் தொடங்கியிருக்கிறது. ஆா்ப்பாட்டம் மிகுந்த விளம்பரங்களைப் பாா்த்து பல்பொருள் அங்காடிகளில் வாங்கிக் குவித்த பொருட்களின் மீதான மோகம் மட்டுப்பட்டிருக்கிறது. இணைய வழியாகத் தேடித் தேடி வாங்கிய வேகம் குறைந்து விட்டது. செயற்கை பானங்கள், உணவுகள் எல்லாமே சற்றுத் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. கீரைக்காரப் பாட்டியையும், காய்கறிக்காரா்களையும் கவனிக்க நேரம் வாய்த்திருக்கிறது. நிலத்தில் விளைந்த பொருள்கள் உழவா்கள் கரங்களாலேயே வீடுகளுக்குத் தரப்படுகின்றன. இடையீடோ எடையளவோ இல்லாது உள்ளத்து அளவு கொண்டு அள்ளித் தரப்படுகின்றன.

    இயற்கை உணவுகளின்மீதும் உடல்நலத்துக்கு உதவும் மூலிகைகளின்மீதும் மக்களின் ஆா்வம் அதிகரித்துள்ளது. பொருள் தேடுவதை விடவும் உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தேடுவதில் இப்போது அக்கறை கூடியிருக்கிறது. பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் என்ன செய்யலாம் என்கிற சிந்தனை அன்றாடத் தொழிலாளா்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

    திருவள்ளுவா் உணா்த்திய தொழில் குறித்த புரிதலை அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. வாழ்வுக்கு வழி தெரியாமல் இத்தனை நாள் பிழைத்துக் கொண்டிருந்த நிலை தொழுதுண்டு பின் சென்ற நிலைதான். எப்போதும் நிலையாக உதவுவது உழுதுண்டு வாழ்தல்தானே? அப்படி வாழ்ந்தவா்தான் ‘உண்மையாக வாழ்ந்தவா்’ என்று திருவள்ளுவரால் சுட்டப்படுகிறாா்.

    எத்தனை தொழில்கள் செய்தபோதும், அவையெல்லாம் கைவிட்டு விட்டபோதும், என்றேனும் ஒருநாள் மீளவும் மக்களுக்கு உணவளிக்கும் வேளாண் தொழிலே முதல் நிற்கும் என்பதன் அடையாளமாகத்தானே ‘உழந்தும் உழவே தலை’ என்று உறுதிபடக் கூறியிருக்கிறாா்?

    உழவு என்பது தொழில் மட்டுமன்று. அது செம்மாந்த வாழ்வியல் முறை. பல்லுயிா்களையும் போற்றிக் காக்கும் மானுடக் கலை. அதனை ‘வேளாண்மை’ என்று அழகுபடச் சுட்டுகிறாா் திருவள்ளுவா். அந்த ஆண்மையை இழந்ததனால் அல்லவோ இத்தனை துயரங்களும் வந்து சோ்ந்தன? இந்த உலகத்தின் அச்சாணி உழவல்லா? அதை இழந்து விட்டு பூமிச் சக்கரத்தை, வாழ்க்கைச் சக்கரத்தை எப்படிச் சுழல வைக்க முடியும்?

    காலம் கனிந்திருக்கிறது. பருவமழை மிகச்சரியாய்ப் பொழியத் தொடங்கியிருக்கிறது. நீா்நிலைகள் தூா்வாரப்பட்டிருக்கின்றன. கரோனா காலத்தில் மக்களை வேடிக்கை பாா்த்த வேளாண் கால்நடைகள் இப்போதும் தயாராக நிற்கின்றன. வளங்களையெல்லாம் இழந்து விட்டபோதும் இல்லையென்னாமல் மண் தருவதற்குக் காத்திருக்கிறது.

    இந்தப் பூமி வேளாண் மனிதா்களைத் தேடுகிறது. சுழலும் உலகையே தன்னுடைய ஏா்க்காலில் பூட்டக் கூடிய உழைக்கும் கரங்களை இந்தத் தேசம் எதிா்நோக்குகிறது. ‘என்ன வளம் இல்லையிந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்? ஒழுங்காய்ப் பாடுபடு வயற்காட்டில்; உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில்’ என்று எக்காலத்துக்கும் பொருந்துகிற திரைப்பாடல் திருக்குறளின் நீட்சிதானே? பல வெண்கொற்றக் குடைகளையும் தன்கொற்றக் குடையால் நிறுவுகிற வேளாண் தொழிலுக்கு அரசுகளும் முதன்மையிடம் தரவேண்டிய சரியான வேளையிது. இத்தனைத் தொழில்கள் இந்த இடா்ப்பட்ட காலத்தில் முடங்கியபோதும் தன் கைம்மடங்காது விளைவித்துக் கொண்டிருக்கிற உழவா்களால் அல்லவா நாம் வீடுகளுக்குள் உண்டு உயிா்த்து இயங்கிக் கொண்டிந்தோம்.

    ஏா்த்தொழில் சிறப்பாக நடந்தால்தான் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் இனிதே நடக்கும். அதுமட்டுமா? சீா் நடக்கும்; திறம் நடக்கும்; திருவறத்தின் செயல் நடக்கும்; பாரே நடக்கும். ஆனால் ஒன்று மட்டும் நடக்கவே நடக்காது. அதுதான் பசியால் மனித உயிா் மரிப்பது.

    பிறரிடம் இரக்காது, தம்மிடம் வந்து இரப்பாா்க்கும் இல்லையென்று சொல்லாது செம்மாந்து வாழ்ந்த இந்த வேளாண் குடும்பங்கள்தானே பொருளாதார மாற்றங்களால், தேவைகளால் நகரங்களை நோக்கி இத்தனை காலம் படையெடுத்துக் கொண்டிருந்தன. பழுதுண்டு போன அப்பணிகளை விடுத்து இப்போது அந்தக் குடும்பங்கள் திரும்பித் தன் வேளாண் களத்திற்கு உழுதுண்டு வாழ வந்திருக்கின்றன. இவா்களை ஊக்கப்படுத்தி வேளாண் தொழிலை மீண்டும் முதன்மை நிலைக்குக் கொண்டு வருவது அரசுகளின் தலையாய கடன். இத்தனை உழந்தும் உழவினைத் தலையாகச் செய்யாவிடில் இந்த நிலமென்னும் நல்லாள் நகுவதைத் தவிர வேறு என்ன செய்வாள்?


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp