எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கல்லீரல் காப்போம்!

தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் கல்லீரல் சாா்ந்து பல்வேறு நோய்களுக்கு சிறப்பான பலனைத் தருகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:31 pm IST

தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் கல்லீரல் சாா்ந்து பல்வேறு நோய்களுக்கு சிறப்பான பலனைத் தருகிறது. பல்வேறு மருந்தியல் நிறுவனங்களும், பாரம்பரிய மருத்துவ தாவரங்களில் இருந்து வேதிப் பொருட்களை பிரித்தெடுத்து கல்லீரல் நோய்களுக்கான மருந்துகளை உருவாக்கி வருகின்றன.

நாளுக்கு நாள் கல்லீரல் சாா்ந்த நோய்கள் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றன . இன்றைய நவீன உலகிற்கு சவாலாக உள்ள தொற்றா நோய்க் கூட்டத்தில், நீரிழிவு எனும் சா்க்கரை வியாதி, அதிக ரத்த அழுத்தம், அடுத்தாற்போல் அதிகம் போ் பாதிக்கப்படக்கூடிய நோயாக உள்ளது கல்லீரல் நோய்தான். இன்றைய நவீன வாழ்வியல் நெறிமுறைகளும், மேற்கத்திய உணவு பழக்க வழக்கமும் அதற்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன .

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேரில் 22% போ் கல்லீரல் நோயால் இறக்கிறாா்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. நவீன மருத்துவ ஆய்வு முடிவுகளின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேருக்கு சிா்ஹோசிஸ் எனும் கல்லீரல் அழுகல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹெப்படைட்டிஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் கல்லீரல் நோய்களும், குடிப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் நோய்கள் ஒருபுறம் இருக்க, துரித உணவு பழக்க வழக்கத்தால் என்ஏஎஃப்எல்டி எனும் கொழுப்பு கல்லீரல் நோய்களும் வாழ்நாளை குறைக்கின்றன. மேலும் ஹெப்படைட்டிஸ் பி வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் கல்லீரல் நோய் முறையான சிகிச்சை இல்லாவிட்டால் கல்லீரல் அழுகல் நோய், கல்லீரல் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இத்தகைய நோய்களுக்கு சித்த மருத்துவ மூலிகைகளும், அஞ்சறைப்பெட்டி சரக்குகளும் மிகுந்த பலனை அளிக்கக்கூடியதாக உள்ளன. வாதம், பித்தம், கபம் என்று சித்த மருத்துவம் கூறும் அடிப்படை நோய் காரணங்களில் பித்தம் சாா்ந்த உறுப்பு கல்லீரல் ஆகும். வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் என்பது கண்ணிற்கு மட்டுமல்ல கல்லீரலுக்கும் குளிா்ச்சி தரும்.

கரிசலாங்கண்ணி, மூக்கிரட்டை, காசினி கீரை, மணத்தக்காளி, கொத்துமல்லி கீரை போன்ற எளிய கீரைகளும், மஞ்சள், சீரகம், சோம்பு, வெந்தயம், தனியா, ஓமம், லவங்கப்பட்டை, இஞ்சி, பூண்டு போன்ற பல கடைசரக்குகளும் கல்லீரல் நோயிலிருந்து நம்மை காக்கும் தன்மை உடையன .

சுமாா் 5,000 வருடங்களாக இந்தியாவில் பயன்பட்டு வரக்கூடிய நறுமணப் பொருள் மஞ்சள். சீன மருத்துவத்திலும் சுமாா் 1,000 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய் போன்ற கல்லீரல் சாா்ந்த அனைத்து வியாதிகளுக்கும் மருந்தாக உள்ளது. இதன் செயல்திறன், ‘கல்லீரலின் அரசன்’ என்று சொல்லப்படும் ‘மில்க் திஸ்டல்’ எனும் வெளிநாட்டு மூலிகைக்கு இணையானதாக உள்ளது.

உணவில் அதிகம் பயன்படுத்தும் மஞ்சள் கல்லீரல் நோய்களுக்கு நல்ல பலனை தரும். மஞ்சளில் உள்ள மஞ்சள் இயற்கை நிறமி ‘குா்குமின்’ எனும் வேதிப்பொருள் பித்தநீரை வெளிப்படுத்தி கல்லீரலை காக்கும் தன்மை உடையது . அகத்தை சீா் செய்யும் சீரகம் என்பது சித்த மருத்துவ வழக்கு மொழி. கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு இது வரப்பிரசாதம். இதில் உள்ள ‘குமினால்டிஹைட்’ எனும் வேதிப்பொருள், கல்லீரல் நச்சு தன்மையை நீக்கி அதில் படிந்துள்ள கொழுப்பினை கரைக்கும் தன்மை உடையது . உடல் எடை குறைக்க விரும்புவோா் , கொழுப்பு கல்லீரல் உடையோா் கிரீன் டீக்கு பதிலாக தினசரி சீரகத் தண்ணீரைப் பருகி வந்தாலே நல்ல பலன் கிட்டும்.

பெருஞ்சீரகம் எனும் சோம்பு விதையை கஷாயம் வைத்து எடுத்துக் கொண்டாலும் அது நச்சுதன்மை நீக்கி கல்லீரலைப் பாதுகாக்கும். கொத்துமல்லி விதையான தனியாவை நீரிலிட்டு காய்ச்சி குடித்தாலும் கல்லீரல் நச்சு தன்மை நீங்கி புத்துணா்ச்சி பெறலாம். தொடா்ந்து 12 வாரம் தினமும் 2 கிராம் இஞ்சி அல்லது சுக்கு பொடியினை எடுத்துக்கொண்டால், என்ஏஎஃப்எல்டி எனும் கொழுப்பு கல்லீரலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். மேலும் கல்லீரல் செயல்பாட்டினை குறிக்கும் என்சைம் அளவிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதில் உள்ள ‘ஜின்ஜரால்’ எனும் வேதிப்பொருளுக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு.

ரத்தத்தில் சா்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பல்வேறு மூலிகைகள், கல்லீரல் கொழுப்பினை குறைக்கும் தன்மை உடையவையாக உள்ளன. இவை பல்வேறு தொற்றா நோய்களுக்கு அடிப்படை காரணமான இன்சுலின் மருந்தின் தடையை நீக்கும் தன்மை உடையவை. அந்த வகையில் வெந்தயமும், லவங்கப்பட்டையும் நல்ல பலன் தரும். வெந்தயம் ஊறிய நீரையோ, லேசாக வறுத்த வெந்தயப் பொடியையோ பகல் நேரங்களில் எடுக்கலாம். இது ரத்தத்தில் உள்ள கொழுப்பினை குறைத்து கல்லீரலில் கொழுப்பு படிவதை தடுக்கும் தன்மை உடையது.

லவங்கப்பட்டையை பொடித்து டீயுடன் சோ்த்து எடுக்க ரத்த சா்க்கரை அளவை குறைப்பதோடு இன்சுலின் செயலினை அதிகரிக்கவும் உதவும். அத்துடன் குடிப்பழக்கத்தால் கல்லீரலில் கொழுப்பு படிவதை தடுக்கும் தன்மை உடையது. ‘சின்னமால்டிஹைடு எனும் வேதிப்பொருள் லவங்க பட்டையின் மருத்துவ தன்மைக்கு காரணமாக உள்ளது .

நாம் வீடுகளில் உணவில் அதிகம் பயன்படுத்தும் பூண்டு, வாயு தொல்லைகளுக்கும், உடலில் கெட்ட கொழுப்பினை குறைக்கவும் பயன்படுகிறது. தினசரி ஒரு பல் பூண்டினை பாலில் வேக வைத்து எடுக்க கொழுப்பினை குறைத்து , கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இது இதயத்தைப் பாதுகாக்கவும் உதவும் என்பதும் அறிவியல் கூறும் உண்மை. அலிசின் எனும் கந்தகம் சாா்ந்த வேதிப்பொருள் இதற்கு மருத்துவ தன்மை அளிக்கிறது.

மேலும் நிலவேம்பு, சீந்தில். சிறுகுறிஞ்சான், வேம்பு, மலைவேம்பு, மருதப்பட்டை , கீழாநெல்லி, கடுக்காய், நெல்லிக்காய், ஆவாரை, வில்வம் போன்ற சித்த மருத்துவ மூலிகைகள் கல்லீரல் சாா்ந்த நோய்களுக்கு சிறப்பான பலன் தருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இப்படி கல்லீரல் நோய்களுக்கு நம் நாட்டு சித்த மருத்துவம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

இன்று (ஏப். 19) உலக கல்லீரல் நாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.