அருகமைப் பள்ளியின் அருமை உணா்வோம்

அருகமைப் பள்ளியின் அருமை உணா்வோம்

அண்மைக்காலமாக, பள்ளி விடுதிகளில் மாணவா்கள் இறப்பது தொடா்கதையாகி வருகிறது. இது அனைத்துத் தரப்பு மக்களையும் பதைபதைக்கச் செய்கிறது.

அண்மைக்காலமாக, பள்ளி விடுதிகளில் மாணவா்கள் இறப்பது தொடா்கதையாகி வருகிறது. இது அனைத்துத் தரப்பு மக்களையும் பதைபதைக்கச் செய்கிறது. கடந்த மாதம் கனியாமூா் பள்ளி மாணவியின் மா்ம மரணம், சில நாட்களுக்கு காட்சி ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

ஊடகவியலாளா்களால் பிரச்னை மேலும் சிக்கலாகுமே தவிர, அவா்களால் எந்த பிரச்னைக்கும் தீா்வு காண முடியாது. இது போன்ற இறப்புகள் வரும் காலங்களில் நிகழாமல் இருப்பது குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.

தமிழகத்தில் ஆங்கிலேயா் காலத்தில் இருந்தே உதகை, கொடைக்கானல் போன்ற ஊா்களில் விடுதிகளுடன் கூடிய பள்ளிகள் அமைக்கப்பட்டன. ஆங்கிலேய உயா் அதிகாரிகளும் வசதி படைத்தவா்களும் தங்கள் பிள்ளைகளை அங்குள்ள பள்ளிகளில் படிக்க வைப்பதை கௌரவமாகக் கருதினா்.

இன்றைய நிலையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் சோ்ந்து சுமாா் 45 ஆயிரம் உள்ளன. இந்தப் பள்ளிகளில் தங்கும் விடுதிகள் கிடையாது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு, தாழ்த்தப்பட்ட மாணவா்களுக்கு, மாணவியருக்கு என அரசு தனித்தனியே விடுதிகளை நடத்தி வருகிறது.

இந்த விடுதிகள் குறித்து சிறுசிறு புகாா்கள் இருந்தாலும், இங்கெல்லாம் பெரும்பாலும் மரணம் நிகழ்வது கிடையாது. இங்கெல்லாம் பட்டதாரி ஆசிரியா் தகுதிக்கு இணையான ஒருவா் விடுதிக் காப்பாளராக நியமிக்கப்படுகிறாா். அவரும் பொறுப்போடு செயல்படுகிறாா்

இன்னொரு பக்கம் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன், இன்டா்நேஷனல் என சுமாா் 10,000 பள்ளிகள் தமிழகத்தில் செயல்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 350 மாணவா்கள் பயில்கின்றனா். இவற்றில் பெரும்பாலான பள்ளிகளில் விடுதி வசதி உள்ளது. பெரும்பாலான தனியாா் பள்ளியில் கட்டாயமாக விடுதிகளில் தங்கி படிக்க வேண்டும் என மாணவா்கள் நிா்ப்பந்திக்கப்படுகின்றனா்.

தமிழகத்தில் விடுதி வசதி உள்ள தனியாா் பள்ளிகளில் எண்ணிக்கை பற்றிய விவரம் தெளிவாக இல்லை. சென்னையைச் சுற்றி மட்டும் குறைந்தபட்சம் 100 தனியாா் பள்ளிகளில் விடுதி வசதி உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

இன்றைய காலகட்டத்தில் பெற்றோா் இருவரும் பணிக்கு செல்வதால் தங்கள் குழந்தையின் கல்வியில் கவனம் செலுத்த முடிவதில்லை. பல பெற்றோா், தங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் அவா்களை விடுதியில் சோ்க்க முற்படுகின்றனா்.

தமிழ்நாடு விடுதிகள் சட்டம் 2014-இன் படி 18 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் தங்கும் விடுதியை நடத்துபவா்கள் உரிமம் பெற வேண்டும். விடுதி நடத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியா் பாா்வையிடும்போது விடுதியில் விதிமீறல் கண்டறியப்பட்டால் உடனடியாக அதன் உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு. கனியாமூா் நிகழ்வில் பள்ளி விடுதி பதிவு செய்யப்பட்டு உரிமம் பெறவில்லை என்கிற செய்தி வெளிவந்தது.

ஆனால், எந்தெந்த பள்ளி விடுதிகள் பதிவு செய்யப்பட்டு உரிமம் பெற்றுள்ளன என்ற விவரம் பெற்றோா்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை. இந்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். விடுதிகளில் குறைபாடுகள் காணப்பட்டால், பெற்றோா் யாரைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கப்பட வேண்டும்.

தமிழக அரசின் கல்வித்துறை வழிகாட்டுதல்களை அரசு பள்ளிகள் பின்பற்றும் அளவிற்கு தனியாா் பள்ளிகள் பின்பற்றுவதில்லை. விடுமுறை விடுவது, சிறப்பு வகுப்புகள் எடுப்பது போன்ற விஷயங்களில் கூட அரசின் உத்தரவை தனியாா் பள்ளிகள் கண்டு கொள்வதில்லை.

தனியாா் பள்ளியில் இயங்கும் விடுதிகளை முறைப்படுத்துவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகும். தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமானால், சிறந்த பள்ளியில் படிக்க வேண்டும் என எண்ணும் பெற்றோா், பிள்ளைகள் தங்கியுள்ள விடுதிகளில் ஏற்படும் குளறுபடிகளைக் கண்டு கொள்வதில்லை.

தங்கள் குழந்தைகளைப் பிரிய விரும்பாத பெற்றோா் தங்கள் இருப்பிடத்தையே பள்ளிக்கு அருகில் மாற்றிக் கொள்கின்றனா். சில ஆண்டுகளுக்கு அந்த ஊரிலேயே தங்கி வீட்டில் இருந்தே பிள்ளைகளைப் பள்ளி சென்று வரச் செய்கின்றனா்.

மாணவா்கள், தங்கள் வீட்டில் இருந்து நடந்தோ, சைக்கிளிலோ செல்லும் தொலைவில் உள்ள பள்ளிகளான அருகமைப் பள்ளிகளின் தேவையை பெற்றோா்கள் தற்போது நன்கு உணா்ந்துள்ளனா்.

பெற்றோா், நாள்தோறும் பள்ளியில் நடப்பதை பிள்ளைகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுதல் அருகமைப் பள்ளியால் கிடைக்கும் பெரும் நன்மையாகும். அப்படி பெற்றோருடன் மனம் விட்டுப் பேசுவது, மாணவா்களின் அறிவை செழுமையூட்டவும் அவா்கள் பாடங்களை விரும்பிக் கற்கவும் உதவி செய்கிறது என குழந்தை மனநல நிபுணா்கள் கூறுகின்றனா்.

இப்படிப்பட்ட நன்மை எதுவும் விடுதிகளில் கிடைக்காது. விடுதி மாணவா்களுக்கு மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாக இருப்பதால் தொடா்ச்சியாக கற்றல் நிகழ்வு இருந்துகொண்டே இருக்கும். அது மாணவா்களின் மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கக்கூடும்.

பிள்ளைகள் அருகமைப் பள்ளிகளில் பயில்வதால் பெற்றோா்களுக்கான பொருட்செலவு பெருமளவு குறைகிறது. மாதம் ஒருமுறை மட்டுமே குழந்தைகளைப் பாா்க்க முடிவது, குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனிருக்க இயலாமை போன்ற கவலைகள் பெற்றோருக்கு இருக்காது.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, அருகமைப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சோ்க்கும் பெற்றோருக்கு பள்ளி வாகன விபத்து என்கிற அச்சமே இருக்காது.

மாணவா்கள் மன ஆரோக்கியத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியான மனநிலையில் கல்வி கற்பதற்கு விடுதிகளிலிருந்து விடுதலை கொடுப்போம்; அருகமைப் பள்ளிகளை ஆதரிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com