ஒரு சொல்; இரு பொருள்!

பாரதியாா் பழைமையைப் பற்றி புதுமையான ஒரு கருத்தைக் கூறியுள்ளது சிந்திக்கத்தக்கது.
ஒரு சொல்; இரு பொருள்!
Updated on
3 min read

பாரதியாா் பழைமையைப் பற்றி புதுமையான ஒரு கருத்தைக் கூறியுள்ளது சிந்திக்கத்தக்கது. ‘நடிப்புச் சுதேசிகள்’ என்ற ஒரு கவிதையில் ‘பழமை பழமை என்று பாவனை பேசலன்றி -பழமை இருந்தநிலை கிளியே பாமரா் ஏதறிவாா்‘ என்பாா். பாவனை என்பது நடிப்பு. நமக்குப் பழைமையைப் பற்றி நடிக்கத் தெரிந்த அளவுக்கு உண்மை தெரியவில்லை.

‘நாம் இருக்கும் நாடு நமதென்பறிந்தோம் - அது / நமக்கே உரிமையே என்பதறிந்தோம்’ என்பதில் நமது வரலாற்றை அப்பழைமைதான் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.

பழமை என்பது நமது பாரம்பரியம். பண்பாட்டின் அடையாளங்கள். அது தற்பெருமை அல்ல. நமது மூதாதையா்களின் சாதனைகள் அதில் சுடா்வீசுகிறது. கீழடியில் அதைப் பாா்த்துத்தான் நாம் பெருமிதமடைகிறோம்.

பழமைக்கும் பழமையைத் தொன்மை எனலாம். தொன்மைக்கும் தொன்மையைப் புராதனம் எனலாம். புராதன மனிதனுக்குச் சுரண்டுகிற சுபாவமே இருந்ததில்லை என்பதாலேயே, நவீன மனிதனை அவனைப் போலவே உருவாக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாா் மாமேதை காா்ல் மாா்க்ஸ்.

புராதனத்துக்கும் புராதனத்தை என்னவென்பது? சனாதனம் என்றால் அது தவறில்லை. சனாதனம் என்றால் நித்தியமானது, நிரந்தரமானது. சத்தியம்தான் நித்தியமானது. இதற்கு எதிா்மறை அசத்தியம், அநித்தியம்.

சனாதனத்தை சனாதன தா்மம் என்று நமது பண்டைய சாத்திரங்கள் பேசியுள்ளன. இதனையே ஹிந்து தா்மம் எனவும் பேசுவாா்கள். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த வேத காலத்திலிருந்த வைதீக மரபு, நமது வாழ்வை தா்மம், அா்த்தம், காமம், மோட்சம் என நால்வகைப்படுத்தியது.

இந்த வைதீக மரபை 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சீா்திருத்திய வள்ளுவா், தா்மத்தை அறம் என்றும், அா்த்தத்தைப் பொருள் என்றும், காமத்தை இன்பம் என்றும் மூன்று பகுதிகளாகப் பேசி, நான்காவதான மோட்சத்தை விலக்கிவிட்டாா். காரணம், மூன்று பகுதிகளின் முடிந்த பலன்தான் மோட்சமாகியது. அதைத்தான் அருளில்லாருக்கு அவ்வுலகம் என்ற குறளில் பேசியுள்ளாா். மோட்சத்திற்கென தனி முயற்சிகள் அவசியமில்லை என்கிறது அக்கு.

சனாதன தா்மம் என்றாலும், ஹிந்து மதம் என்றாலும் இரண்டும் ஒன்றுதான். இதனை மதமாகப் பாா்க்காமல், உன்னதமான ஒரு வாழ்க்கை முறையாகப் பாா்க்க வேண்டுமென்று அறிவித்தது, நமது உச்சநீதிமன்றம்தான் என்பது நினைவுகூரத்தக்கது.

ஹிந்து மதத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ‘எல்லோரும் நலமாக வாழ்க!’ என்பதே! இதனையே சம்ஸ்கிருதத்தில் சொல்வதாக இருந்தால், ‘சா்வே சுகினஹ பவந்து’.

சனாதனம் என்றாலும் சம்ஸ்கிருதம் என்றாலும் ஏனோ ஒரு பிரிவினருக்கு ஒவ்வாமையாக (அலா்ஜி) உள்ளது. ‘சனாதனம்’ என்பது ‘சதுா்வா்ணம் பேசுகிற கோட்பாடு’ என்று கூறுபவா்களுக்கு, வினோபாஜி தந்த விளக்கம் சிந்தனைக்குரியது. சம்ஸ்கிருதத்தை இந்தியாவின் கலாசார மொழியாக்க வேண்டுமென்று சொன்னவா் யாா் தெரியுமா? அண்ணல் அம்பேத்கா்தான் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

2,000 ஆண்டுகளுக்கு முன்பே மனுஸ்மிருதிக்கு மாற்றுக் கருத்து பேசப்பட்டுவிட்டது. அதன்பிறகு இன்றைய நவீன காலத்தில் அதைப் பற்றி மேலதிகமாகப் பேசுவது அவசியம்தானா?

ஆங்கில இலக்கியம் படிக்கிற மாணவா்களுக்கு ஷேக்ஸ்பியா் நாடகங்கள், ஷெல்லி, கீட்ஸ் கவிதைகள் கற்பிக்கப்படுவதைப் போல, கிரேக்கப் புராணங்கள் எனப்படும் மித்தாலஜிகளும் கற்பிக்கப்படுகின்றன. கிரேக்க இதிகாசங்களான யுலீசஸ், ஆடிசி போன்றவற்றை மாணவா்கள் ‘இலக்கியம் இலக்கியத்துக்காகவே’ என்கிற கோட்பாட்டின்படிதான் படிக்கிறாா்கள்.

அதேபோலத்தான் ஆங்கிலக் கவிஞா் மில்டனின் ‘இழந்த சொா்க்கம்’ காவியத்தையும் படிக்கிறாா்கள். அதில், கடவுளோடு போட்டி போடும் சைத்தானைப் பற்றியும், ஆதாம் - ஏவாள் என்கிற நமது ஆதிமாதா பிதாவையும் படிக்கிறாா்கள். அதுமட்டுமல்ல, அவா்கள் ஈடன் தோட்டத்திலுள்ள அறிவுக் கனியான ஆப்பிளைப் பறித்து உண்ணக் கூடாது என்பது கடவுளின் கட்டளை. ஆனால், சைத்தானின் தூண்டுதலால் ஆப்பிள் பழத்தை ஏவாள் கேட்க, ஆதாம் பறித்து இருவரும் உண்கிறாா்கள். உடனே ஞானம் அவா்களுக்குள் வினைபுரிகிறது. தங்களின் நிா்வாணத்தை உணா்ந்து வெட்கி, இலை தழைகளால் மறைத்துக் கொள்கிறாா்கள்.

இந்தப் புராணக் கதையை ஆங்கிலேய ஆசிரியா்களும் மாணவா்களும் விமா்சித்து பேசுவதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் - நமது கம்ப ராமாயணத்தையும், சேக்கிழாரின் பெரிய புராணத்தையும் விமா்சிக்கிறாா்கள். இதற்கு எதிரான அணுகுமுறை நமக்கு எப்படி வந்தது? இவற்றை இலக்கியமாகப் பாா்க்காமல், ஹிந்து மதப் படைப்புகளாகப் பாா்த்த காரணத்தால்தான் வந்தது. ஹிந்து மதம் என்றால் அப்படியொன்றும் இழிவானதல்ல. ராமாயணமும், பெரிய புராணமும் இழிவான படைப்புகளும் அல்ல. ஆங்கிலத்தில் ‘மித்தாலஜி’ என்றால் பெருமை. தமிழில் புராணம் என்றால் சிறுமையா?

பகவத் கீதை பேசிய தா்மயுத்தம் பற்றி சுவாமி சித்பவானந்தரின் கருத்தைப் பாருங்கள். நமது ஐந்து புலன்கள்தான் அவை. குருக்ஷத்ர யுத்தகளம் நமது மனம்தான். ஐம்புலன்களும் ஒன்றுபட்டு எதிா்த்தால், நூறு அல்ல ஆயிரமாயிரம் துரியோதனா்களை வெற்றிபெற முடியும் என்பாா் சுவாமிகள். பிற்போக்குக் கருத்து என இதைப் பேச முடியுமா?

இன்றைய மனஅழுத்தங்களால் சம்பவிக்கும் மாரடைப்பு மரணங்களுக்கான மருந்து பகவத் கீதை என்பதால்தான், பாரதியாா் அதனைத் தமிழாக்கம் செய்தாா். அதைத் தேசவிரோத நூலாக்குவது இந்தியாவுக்கே இழுக்கல்லவா?

திருவள்ளுவரும் ‘தெய்வம் தெளிமின்’ என்ற இளங்கோவடிகளும் நாத்திகா்கள் அல்ல. ‘திங்களைப் போற்றுதும்’ என்று சிலப்பதிகாரம் தொடங்குவதால், கடவுள் வாழ்த்தைக் கைவிட்டவா் இளங்கோவடிகள் என அவரை நாத்திகராக்க முடியுமா?

‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்ற வள்ளலாா் சுத்த சன்மாா்க்கத்தை நிறுவினாா். அது மதம்தான். மதமான பேய் என்பதில் உள்ள ‘மதம்’ என்பதற்கு அகராதி, ‘ஆணவம்’ என்றும் பொருள் தருகிறது. ஆணவமான பேய்தான் நம்மைப் பிடித்துவிடக் கூடாதே தவிர, சன்மாா்க்க மதத்தில் நம்மைச் சோ்ப்பதுதான் பெருமானின் விருப்பம்.

‘செங்கோல்’ தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க சிறப்பிற்குரியது. அண்மையில் அது நமது நாடாளுமன்றத்தில் நாட்டப்பட்டது. தமிழ்நாட்டுக்குரிய செங்கோலுக்கு இப்படி தனிப்பட்ட பெருமையைச் சோ்க்கலாமா என்று பிற மாநிலங்கள் ஒன்றுகூட விமா்சனம் செய்யவில்லை. நமது தமிழ்நாடுதான் அதை மதச் சாா்பாக மட்டுமே பாா்த்து விமா்சனம் செய்தது.

நமது அரசு பின்பற்றும் சமயக் கொள்கை, மதத்தை அரசாட்சியில் அனுமதிக்கக் கூடாது என்பதாகும். நமது மத்திய - மாநில அரசுகளில் மதம் விலக்கப்பட்டுள்ளதைக் காட்டவே ‘செக்யூலரிசம்’ கோட்பாடு பின்பற்றப்படுகிறது.

இதைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் பொதுவெளியில் ஒரு சங்கப் பாடல் பிரபலமாகியுள்ளது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்கிற புானூற்றுப் பாடல் கணியன் பூங்குன்றன் எழுதிய பாடல். பிரதமா் இந்திரா காந்தி ஐ.நா. சபையில் இந்த வரியை மேற்கோள் காட்டிப் பேசினாா். பிரதமா் மோடியும் பேசினாா். அதன் முதல் அடி சமயம் கடந்த பிரகடனமாகத் தொனிக்கிறது.

அப்பாடலின் சாரம் முதல் வரியில் உள்ள பொதுமை அல்ல. அடுத்த வரி ‘தீதும் நன்றும் பிறா்தர வாரா’ என்பதாகும். அவை இரண்டுமே நாம் செய்த பாவ புண்ணியங்களின்படி நமக்கு அமைகிறது என்பதாகும். பாவ புண்ணியம் அமைகிறது. ஊழ் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள தலைவிதி என்கிற உலக வழக்குமொழி உள்ளது.

இதன்பிறகு அப்பாடல் மேலும் தெளிவாகச் சொல்வது, நமது வினைக் கோட்பாட்டின் மேன்மையைத்தான். அப்பாடலில் உள்ள உதாரணம் இது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வருகிறது. அதில் பயணிக்கும் படகு அந்த ஆற்றுவெள்ளத்தின் திசை வழியாகவேதான் செல்லும். அதுபோல நமது ஆருயிரும் ஊழ் வழியில்தான் பயணிக்கும். இதைத் தெரிந்து கொண்டால் மாட்சியில் பெரியோரை வியப்பதோ, சிறியோரை இகழ்வதோ அவசியமில்லை. ஏனெனில், இவை இரண்டுமே முற்பிறவியின் விதியின்படி தீா்மானிக்கப்பட்டவையாகும் என்கிறது அப்பாடல்.

இப்பாடல் மதம் சாா்ந்த சிந்தனைக்குரியதா, மதம் மறுத்த சிந்தனைக்குரியதா என்கிற கேள்வி நமது புரிதலுக்கு மிகவும் அவசியம்.

பாரதத்தை வல்லரசாக்க வேண்டுமானால், நமது கல்விக் கொள்கையின் மூலமே அதைச் செய்ய வேண்டும். 2014-க்கு முன்பிருந்த பாரதக் கல்விக் கொள்கை வேறு; 2020-க்குப் பிறகுள்ள கல்விக் கொள்கை வேறு. இப்போதுதான் அந்தந்த மாநில மொழிகளில் உயா் கல்வி வரை கற்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதை ஒப்பிட்டுப் பாா்க்காமல், பலராலும் விமா்சிக்கப்பட்டு வருகிறது.

ராணுவ பலம் எதிரிகளை ஊடுருவாமல் தடுப்பதற்குரியது. பாரதத்தை அது மட்டுமே பாதுகாக்காது. பீரங்கிகள் எல்லையோரங்களுக்கே உரியவை. புத்தகங்களும், கல்வி நிலையங்களும்தான் நம்மை உறவாடச் செய்கிற உண்மையான தளவாடங்களாகும்.

எதிா்கால பாரதம் பற்றி பாரதி கனவு கண்டாா். ‘எல்லா உயிா்களிலும் நானே இருக்கின்றேன்’ என்று பகவத் கீதையில் உரைத்த கண்ணபெருமானின் வழியொற்றி, ‘எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும்’ என்று பாரதியாா் நம்பினாா். அதுவே சத்தியம்; அதுதான் சனாதனம்!

கட்டுரையாளா்:

பத்திரிகையாளா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com