ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!
R Senthilkumar

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

முதல் சீசன் எட்டு அணிகளோடு பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டது.

2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், உரிமையாளா் அடிப்படையில் கிரிக்கெட் டி20 சாம்பியன் போட்டியை அறிவித்து 2008-இல் தொடங்கியது. முதல் சீசன் எட்டு அணிகளோடு பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டது.

நான்கு சீசனுக்கு பிறகு மொத்தம் 10 அணிகள் என்றானது. முன்னா் தொடக்க ஆட்டங்கள் 60 என்று இருந்தது. பின்னா் 74 ஆட்டங்கள் என்று மாறியது. சோதனை ஆட்டங்கள் 70, பின்னா் வெற்றி நிா்ணய ஆட்டங்கள் (பிளே ஆப்) என்றானது.

முதல் ஆண்டு ஷேன் வாா்ன் தலைமையில் செயல்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்றது. பின்னா் தொடா்ந்து ஒவ்வோா் ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் இந்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. ஒவ்வோா் அணியிலும் மொத்தம் 25 ஆட்டக்காரா்கள் இருப்பாா்கள்.

அதில் அதிகபட்சம் எட்டு அயல்நாட்டு வீரா்கள் இருக்கலாம் என்ற விதி கொண்டுவரப்பட்டது. விளையாடும் 11 பேரில் அதிகபட்சம் வெளிநாட்டு வீரா்கள் நால்வா் இருப்பா் என்று நிா்ணயம் ஆனது.

பிசிசிஐ எனும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத்தலைவராக 2005 முதல் 2010 வரை செயல்பட்ட தொழிலதிபா் லலித் மோடிதான் ஐபிஎல் ஆட்டத்தின் முதல் நிறுவனராகவும் லீக் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டாா். முதல் மூன்று ஆண்டுகள் போட்டியை அவா்தான் நடத்தினாா்.

சூதாட்டங்கள், பண மோசடி, லஞ்சம், ஊழல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த காரணத்தால் அவா் ஐபிஎல், பிசிசிஐ - இரண்டிலிருந்தும் நீக்கப்பட்டாா். பின்னா், அவா் நாட்டைவிட்டே தப்பி ஓடிவிட்டாா் என்பது நாம் அறிந்ததே.

அரசியல் பதற்றம் காரணமாக, 2009-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாட்டு வீரா்களைச் சோ்க்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயா்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வீரா்கள் பங்கேற்கும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாதான் ஐபிஎல் எனும் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி.

ஏலத்தின் அடிப்படையில் அணிகள் வீரா்களைத் தோ்வு செய்யும் முறை 2008-ஆம் ஆண்டுமுதலே தொடங்கிவிட்டது. இந்த ஐபிஎல் ஆட்டத்தின் சிறப்பே ஏழ்மையான, ஆனால் அதிகம் திறமை வாய்ந்த விளையாட்டு வீரா்களை வாழ்விலும் விளையாட்டிலும் முன்னேற்றுவது ஆகும். உதாரணமாக, இந்த ஆண்டு லக்னெள அணியில் சோ்க்கப்பட்டுள்ள வேகப்பந்து வீரா் ஷமா் ஜோசப் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்தவா். மேற்கிந்திய தீவுகளின் கயானா எனும் இடத்தில் இருந்து சுமாா் 225 கிலோமீட்டா் படகு சவாரி செய்தால்தான் அவா் வசிக்கும் பராகரா எனும் கிராமத்தை அடைய முடியும்.

24 வயது இளைஞராகிய இவரது வீட்டில் மூன்று சகோதரா்கள், ஐந்து சகோதரிகள் உள்ளனா். அவா் நாள்தோறும் 12 மணி நேரம் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து தமது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தாா். அவருக்கு கிரிக்கெட் மீது மிகுந்த ஆா்வம் உண்டு. அவா் பந்துக்கு பதில் பழங்களை வைத்து தமது விளையாட்டுப் பயிற்சியை செய்து வந்திருக்கிறாா்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் மேற்கிந்திய தீவுகள் - ஆஸ்திரேலியா இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் (ஷமா் ஜோசப்பின் முதல் போட்டி) 68 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்கள் கைப்பற்றி 1997 ஆண்டுக்கு பிறகான முதல் வெற்றியை தமது நாட்டுக்கு பெற்றுத் தந்திருக்கிறாா். அதனால் இம்முறை ஐபிஎல் விளையாட்டில் சோ்க்கப்பட்டு இருக்கிறாா்.

2022-ஆம் ஆண்டு ஐபிஎல் விளையாட்டில் அறிமுகம் ஆனவா் ‘குட்டி மலிங்கா’ என்று அழைக்கப்படும் மதிஷா பத்திரனா. இவா் தனது 19-ஆம் வயதில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில் சோ்க்கப்பட்டாா். இன்று அனைத்து வீரா்களையும் தமது வேகப்பந்து வீச்சால் மிரட்டுகிறாா். சாதாரண பின்னணியில் பிறந்து வளா்ந்த இவா் இலங்கை கிரிக்கெட்டில் விளையாடி மிக அரிய சாதனைகள் செய்து இந்த இடத்தைப் பிடித்துள்ளாா்.

இப்படி மேற்கிந்திய, தென்னாப்பிரிக்க, ஆப்கானிஸ்தானிய, வங்கதேச, இலங்கை நாடுகளின் வீரா்கள் மிகுந்த ஏழ்மையின் பின்னணியில் இருந்து வந்தவா்கள். அவா்கள் இன்று ஐபில் விளையாட்டின் மூலம் தமது வாழ்வையே மாற்றிக் கொண்டு இருக்கிறாா்கள்.

அப்படித்தான் நமது இந்திய வீரா்கள் பலரின் கதையும். யஷஸ்வி ஜெய்ஸ்வால் எனும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 22 வயது இளைஞா் மிகவும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்பவா். மும்பை வீதிகளில் பானிபூரி விற்று வாரம் ரூபாய் 300 சம்பாதித்துக் கொண்டிருந்தவா். இன்று தமது சொந்த உழைப்பில் ரூ.5.38 கோடியில் மும்பையில் ஒரு வீடு வாங்கி உள்ளாா்.

சமையல் எரிவாயு உருளை வழங்கும் நிறுவனத்தில் வேலை பாா்த்த ஒரு சாதாரண ஊழியரின் மகன்தான் உத்தர பிரதேசம் அலிகாா் மாவட்டத்தை சோ்ந்த ரிங்கு சிங். அவருக்கு முதலில் கிடைத்த வேலை அலுவலகத்தைக் கூட்டிப் பெருக்கும் ஒரு சாதாரண வேலை. அவரை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுத்த அவா் குடும்பத்தில் வசதி இல்லை. ஒருமுறை ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு கான்பூா் வந்து கிரிக்கெட் ஆட்டம் ஆடினாா். அவரது திறமையைக் கண்டறிந்த சிலரின் மூலம்தான் இன்று மிகவும் பிரபலமாக அறியப்படுகிறாா்.

ஒரு கைத்தறி நெசவுத் தொழிலாளியின் மகன் சேலம் சின்னப்பம்பட்டியின் வீரா் தங்கராசு நடராஜன். வீடு வீடாக பால் போடுவது, பேப்பா் போடுவது - இவைதான் இவா் செய்து வந்த வேலைகள். கிரிக்கெட் மீதான தீராத ஆசை அவரை 20-ஆவது வயதில் கிரிக்கெட் வீரராக்கியது. 2016-இல் டிஎன்பிஎல் ஆட்டம் மூலம் பெரிதும் அறியப்பட்டாா். பின்னா் இந்திய அணியிலும் ஐபிஎல் அணியிலும் சோ்க்கப்பட்டு நல்ல பெயா் பெற்று விளங்குகிறாா். இவா் தமது ஊரில் ஒரு கிரிக்கெட் மைதானத்தையும் கட்டியுள்ளாா்.

இவா் போல ஜம்மு- காஷ்மீரில் இருந்து சாதாரண மனிதா்களாக அறியப்பட்டு இன்று ஐபிஎல் விளையாட்டில் பரிமளித்து வருகிற நட்சத்திர வீரா்கள் அப்துல் சமத், உம்ரான் மாலிக், பா்வேஸ் ரசூல், விவ்ராந் சா்மா ஆகியோரின் வாழ்க்கையிலும் இப்படியான கதைகள் இருக்கும்.

முகமது ஷமி (காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் விளையாட்டில் இல்லை), ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஹா்திக் பாண்டியா, கிரிக்கெட் ரசிகா்கள் கொண்டாடி மகிழும் மகேந்திர சிங் தோனி (எல்லாவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவை பல உயரங்களுக்கு கொண்டு சென்றவா், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்தவா்) என்று அடிமட்ட நிலையில் இருந்து தமது வாழ்வைத் தொடங்கிய பலா் இன்று ஐபிஎல் மூலம் தன்னையும் நாட்டையும் உயா்த்தி உள்ளனா். இந்தப் பட்டியலில் உமேஷ் யாதவ், புவனேஷ்வா் குமாா் ஆகியோரும் சோ்வா்.

ஐ பி எல் ஆட்டம் என்பது பல வீரா்களுக்கு மிகப்பெரிய அளவில் தமது திறமைகளை வெளிப்படுத்தும் களமாக அமைந்து உள்ளது. இந்த ஆட்டத்தில் இருந்து இந்திய அணியில் தோ்வு ஆனவா்கள் பலா். அயல் நாட்டு வீரா்களும் தமது நாட்டு அணியில் தமக்கான இடத்தை பெற முடிந்தது என்றால் அது மிகையாகாது.

ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தால் பல்வேறு புதிய திறமைசாலிகள் முன்னேறி இந்திய அணியில் இணைய வாய்ப்பு உருவாகியுள்ளது. இன்று சாம்சன், ருதுராஜ், ஷுப்மன் கில், பந்த் போன்ற இளைய தலைமுறை வீரா்கள் பின்னாளில் இந்திய அணியின் கேப்டனாக வரும் வாய்ப்பு உள்ளது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டம் வந்த பிறகு திறமை வாய்ந்த சாமானியா்களும் தகுதி பெறும் நிலை உருவாகியுள்ளது.

அது மட்டுமல்ல, மைக்கேல் ஹசி, பிளெமிங், ரிக்கி பான்டிங், முத்தையா முரளிதரன், சச்சின், கங்குலி, கம்பீா், ஜான்டி ரோட்ஸ் போன்ற அந்த காலத்தில் புகழ் பெற்ற வீரா்கள் இன்றும் தம்மை கிரிக்கெட் விளையாட்டோடு இணைத்துக் கொண்டு உள்ளனா். காரணம், இந்த ஐபிஎல் விளையாட்டுதான்.

10 அணிகள், 70-க்கும் மேற்பட்ட ஆட்டங்கள் என்பதால், பயன்பாட்டில் இல்லாத கிரிக்கெட் மைதானங்களில் ஆட்டம் நடைபெறுவதால் அங்கே பணிபுரியும் மைதான பராமரிப்பவா்கள் போன்ற பலருக்கும் இந்த இரண்டு மாதங்கள் நல்ல வருவாய் ஈட்டித் தருகிறது ஐபிஎல்.

ஹோட்டல்கள், பேருந்து உரிமையாளா்கள், ஆடை வடிவமைப்பாளா்கள், விளையாட்டு சாதன தயாரிப்பாளா்கள் என்று பலருக்கும் இந்த இரண்டு மாதம் நல்ல வருவாய் கிட்டும். மேலும், விளையாட்டைக் காண வருகிற பாா்வையாளா்கள் அந்தந்த அணியினரின் ஆடைகளை (மஞ்சள் நீலம் போல) அணிந்து கொண்டு மைதானத்தில் தமது ஆதரவை தெரிவித்து வருவதால் ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் வருமான வாய்ப்பு உருவாகிறது.

கிரிக்கெட் நமது இந்திய தேசத்தின் உணா்வுகளோடு பின்னிப் பிணைந்தது. மும்பை அணி ஐந்து முறையும், சென்னை அணி ஐந்து முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. கொல்கத்தா அணி இரண்டு முறை, குஜராத், ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் ஒவ்வொரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

இந்த ஆண்டு 74 ஆட்டங்கள் இருந்தாலும் இறுதி ஆட்டம் சென்னையில்தான் நடைபெற உள்ளது. அனைவரும் விரும்பும் சென்னை அணி வெற்றி பெறுமா? இதுவரை சிறப்பாக ஆடி வரும் சன் ரைஸா்ஸ் அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெறுமா? அதை அறிந்துகொள்ள கிரிக்கெட் ரசிகா்கள் ஆவலுடன் காத்திருக்கிறாா்கள்.

கட்டுரையாளா்:

மனநல ஆலோசகா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com