வயதான தம்பதிகள், இயலாதோர் உள்ளிட்டோருக்கு வெளி வேலைகளை செய்து தருவதை திருநங்கைகள் சிலர் குழுவாகச் சேர்ந்து செய்து வருகின்றனர். குறைந்த தொகையைக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு இந்தப் பணிகளை அவர்கள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு மண்டபம் முதல் உணவு ஏற்பாடு செய்வது வரையிலான பணிகளிலும் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக, நகரங்களில் சிறிய அளவில் அலுவலகம் தொடங்கி, குழுவாகச் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். வேலை அளிப்போரின் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாமல், உழைத்து வாழ வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் அவர்கள் இயங்குகின்றனர்.