ஒருவேளை புவி சுற்றுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்? இதுவும் நடக்கலாம், ஆனால் இன்னும் குறைந்தபட்சம் சில பில்லியன் ஆண்டுகளுக்குள் இது நிற்கும் வாய்ப்பு இல்லை. ஒருவேளை அப்படி நின்றுவிட்டால் புவியிலுள்ள வளிமண்டல காற்றின் வேகம் பூஜ்யத்துக்கு வந்துவிடும். இதனால் புவி, இப்போது சுற்றும் திசைக்கு எதிர்த்திசையில் அசுர வேகத்தில் சுற்றத் துவங்கும். கட்டடங்கள் நொறுங்கும். பெருங்கடல்கள் நிலப்பகுதிமேல் பாயும். வளிமண்டலத்திலிருந்து சூறாவளி விசிறியடிக்கும். நாம் புவியின் மேல் மணிக்கு 1670 கி.மீ வேகத்தில் சுற்றுவதால் அது நின்றதும் அனைத்தும் பயங்கரமாய் வளிமண்டலத்தில் தூக்கி அடிக்கப்பட்டு அங்கே மலைத்துகள்கள், நீர்த்துகள்களுடன் நாமும் துளித்துளியாக உடைந்து போய் சுற்றுவோம். புவியின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும், ஆழமான பிடிப்பில் உள்ள மரங்கள், கட்டடங்கள், பாறைகள், உயிரினங்கள் அனைத்தும் வளிமண்டலத்தில் தூக்கி விசிறி எறியப்படும்.