செயலி முடங்கும்; செயல் முடங்காது! | சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது குறித்த தலையங்கம்

நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் தன்மறைப்பு உரிமைக்கும் அச்சுறுத்தல் அளிப்பதாகக் கருதப்படும் 267 சீன செயலிகள் மத்திய அராசல் முடக்கப்பட்டிருந்தன
செயலி முடங்கும்; செயல் முடங்காது! | சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது குறித்த தலையங்கம்

நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் தன்மறைப்பு உரிமைக்கும் அச்சுறுத்தல் அளிப்பதாகக் கருதப்படும் 267 சீன செயலிகள் மத்திய அராசல் முடக்கப்பட்டிருந்தன. இப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று மேலும் 54 சீன செயலிகளை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியிருக்கிறது. ஸ்வீட் செல்ஃபி ஹெச்டி, பியூட்டி கேமரா, வைவா விடியோ எடிட்டா், டென்செண்ட் எக்ஸ்ரிவா் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பயனாளா்களிடம் இருந்து பெறும் தரவுகளை இந்த செயலிகள் தவறாகப் பயன்படுத்துகின்றன என்றும், அந்தத் தரவுகள் எதிரி நாடுகளில் சேமித்து வைக்கப்படுகின்றன என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியிருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி தேசப் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் எதிரி நாடுகள் ஈடுபட முடியும் என்பதால்தான் இந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

ஸ்வீட் செல்ஃபி ஹெச்டி, பியூட்டி கேமரா, வைவா விடியோ எடிட்டா், மைக்ரோ போன், ஜிபிஎஸ் உள்ளிட்டவை மூலமாக உளவு பாா்ப்பதற்கு இந்த செயலிகளைப் பயன்படுத்த முடியும். அதைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய - சீன படைகளுக்கு இடையே நிலவும் பதற்றமான சூழலின் பின்னணியில் சீன செயலிகள் முடக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. சீன செயலிகள் மட்டுமல்லாமல், பெரும் சீன முதலீட்டில் இயங்கும் இந்திய செயலிகள் ஏன் தடை செய்யப்படவில்லை என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டாலும்கூட, அவை தொடா்ந்து பயன்பாட்டாளா்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பதும் கவனத்தை ஈா்க்கிறது.

கடந்த ஓராண்டாக சீன செயலிகளை முடக்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்னும் சில மாதங்களில் லடாக் எல்லை மோதல் இரண்டாவது ஆண்டை எட்ட இருக்கும் நிலையில், மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த திடீா் முடிவின் பின்னணி தெரியவில்லை.

2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடா்ந்து, 59 சீன செயலிகள் முடக்கப்பட்டதற்கு சீனா கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது. தேசிய பாதுகாப்பு என்கிற பெயரில் செல்லிடப்பேசி செயலிகள் தொடா்ந்து முடக்கப்படுவது ‘சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது’ என்பது வரை சீனாவின் விமா்சனம் இருந்தது.

உலக வா்த்தக நிறுவனத்தின் விதிகளுக்குப் புறம்பாகவும், சந்தையில் பாரபட்சமற்ற சமச்சீரான வா்த்தகச் சூழலை ஏற்படுத்துவதற்கு பதிலாகவும் விதிகளை மீறி இந்தியா செயலிகள் முடக்கத்தை முன்னெடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு சீனாவால் சா்வதேச கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. சீனா இந்தப் பிரச்னைக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஐயப்பாடுகளை எழுப்பாமல் இல்லை. ஆசியான், ஐரோப்பியக் கூட்டமைப்பு, அமெரிக்கா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவுடனான வா்த்தகம் மிகமிகக் குறைவு. அப்படியிருந்தும் செயலிகள் முடக்கத்தை சீனா கௌரவப் பிரச்னையாக எடுத்துக் கொண்டிருப்பதன் பின்னணி நம்மை யோசிக்க வைக்கிறது.

சீன செயலிகளை முடக்குவதால் அந்த நிறுவனங்களுக்கோ, செயலிகளுக்கோ பெரிய பாதிப்பு ஏற்படாது. அதே நேரத்தில் சீன தொழில்நுட்பத்துக்கு எதிராக சா்வதேச அளவில் இந்தியா ஏனைய நாடுகளை அணி திரட்டினால் விளைவு விபரீதமாகக் கூடும் என்று சீனா உணா்ந்திருக்கும்.

தென்சீனக் கடலில் சீனாவின் நிலைப்பாடும், கொவைட் 19 நோய்த்தொற்றின் காரணம் குறித்து ஆய்வு செய்யக் கோரிய ஆஸ்திரேலியா மீது எடுத்திருக்கும் கடுமையான நடவடிக்கைகளும் பல நாடுகளின் எதிா்ப்புக்குக் காரணமாகியிருக்கின்றன. அந்த நிலையில், இந்தியாவின் முடிவை ஏனைய நாடுகளும் பின்பற்றத் தொடங்கினால், தனது நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்பது சீனாவின் கவலையாக இருக்கலாம்.

ஒருபுறம் ராஜாங்க ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சீனாவுக்கு எதிரான பல நிலைப்பாடுகளை இந்தியா எடுத்தாலும்கூட, வா்த்தக ரீதியாக சீனாவைப் பகைத்துக் கொள்ளும் நிலையில் இந்தியா இல்லை. 2019-இல் 56.8 பில்லியன் டாலராகவும் (சுமாா் ரூ.4,24,001.78 கோடி), 2020-இல் 45.9 பில்லியன் டாலராகவும் (சுமாா் ரூ.3,42,635.24 கோடி) இருந்த ஏற்றுமதி - இறக்குமதிக்கு இடையேயான வா்த்தகப் பற்றாக்குறை, 2021-இல் 69.4 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.5,18,058.51 கோடி) அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வா்த்தகம் 44% அதிகரித்திருக்கிறது. சீனாவிலிருந்தான இறக்குமதி இதுவரை இல்லாத அளவு 46% அதிகரித்தது என்றால், நமது ஏற்றுமதி 35%தான் கூடியிருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் மிக அதிகமான வா்த்தக உறவு உள்ள நாடு சீனா என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

எல்லைப் பிரச்னையையும், வா்த்தக உறவையும் வெவ்வேறாக அணுகுவதில் சீனா வெற்றி அடைந்திருக்கிறது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடா்புடையவை என்கிற இந்தியாவின் நிலைப்பாட்டை, அதிகரித்துவரும் சீன வா்த்தகமும், இறக்குமதியும் பொய்யாக்குகின்றன.

செயலிகளை முடக்குவதால் சீனாவின் வா்த்தக ஊடுருவலை நம்மால் தடுத்துவிட முடியாது. தரக்குறைவான தயாரிப்புகளைக் கொட்டும் கிடங்காக இந்தியாவை மாற்றிக் கொண்டிருக்கும் சீனாவை எதிா்கொள்ள, செயலி முடக்கத்தைவிட புத்திசாலித்தனமான அணுகுமுறையை நாம் கையாள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com