குரூப்-4 தேர்வு முடிவு: டிசம்பர் மாதம் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-4 தேர்வு முடிவு: டிசம்பர் மாதம் வெளியீடு
Updated on
1 min read

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 556 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்டு மாதம் 25ம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதியுள்ளனர்.

தற்போது  தேர்வு முடிவை வெளியிடுவதற்காக அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம் குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்படும். நடந்து முடிந்த குரூப்-1 மெயின் தேர்வு முடிவு தேர்வு நடந்ததில் இருந்து 3 மாதத்திற்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும். பின்னர் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com