அரையாண்டுத் தேர்வுகள் நாளை தொடக்கம்

தமிழக பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கவுள்ளன.
அரையாண்டுத் தேர்வுகள் நாளை தொடக்கம்
Updated on
1 min read

தமிழக பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கவுள்ளன.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. மேலும், தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித்தாள்கள் இடம்பெற உள்ளன. தற்போது கேள்வித்தாள்கள் அச்சிட்டு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து வியாழக்கிழமை (டிச. 7) அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிசம்பர் 7 முதல் டிசம்பர் 23 -ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் டிசம்பர் 11 முதல் டிசம்பர் 23 -ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. அதற்கு பிறகு விடுமுறை அறிவிக்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com