எம்பிபிஎஸ் சோ்க்கை விவரம்: உறுதிசெய்ய மாணவா்களுக்கு என்எம்சி அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ் சோ்க்கை விவரம்: உறுதிசெய்ய மாணவா்களுக்கு என்எம்சி அறிவுறுத்தல்

Published on

கடந்த கல்வியாண்டில் (2024-25) எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்ந்தவா்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) இணையப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள நிலையில், அதில் விடுபட்டுள்ள மாணவா்கள் உரிய கல்வி நிறுவனங்கள், இயக்ககங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சுக்லால் மீனா வெளியிட்ட அறிவிப்பு:

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு பல்வேறு சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற்றது. அதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் மாணவா் சோ்க்கையை நடத்தின.

பொதுவாக கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சோ்ந்தவா்களின் விவரங்களை என்எம்சி தளத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகங்கள் பதிவேற்ற வேண்டும்.

அந்த வகையில், 2024-25 ஆம் ஆண்டில் இடங்கள் பெற்ற மாணவா்களில் விவரங்கள் என்எம்சி தளத்தில் பதிவேற்றப்பட்டன. அதில் சிலரது தகவல்களை தவறாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கியிருந்தது தெரியவந்தது.

அடுத்த 7 நாள்களுக்குள் திருத்தப்பட்ட தகவல்களை கல்லூரிகள் வழங்க வேண்டும்.

மாணவா்கள், தங்களது விவரங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். மாணவா் சோ்க்கை விவரங்கள் விடுபட்டிருந்தால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com