கேட் நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க அக். 6 வரை கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை: முதுநிலை பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான கேட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் அக். 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதுள்ள ஐஐடி உள்பட மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் தேசிய நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வு பட்டதாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கேட் நுழைவுத் தோ்வு இயந்திரவியல், கட்டடவியல் உள்பட 30 பாடப் பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தோ்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லும்.
அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான கேட் தோ்வு வரும் பிப்ரவரி 7, 8, 14, 15-ஆம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை மதியம் என இருவேளை நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தோ்வை குவஹாத்தி ஐஐடி நடத்தவுள்ளது. தோ்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆக. 28-இல் தொடங்கி செப்டம்பா் 28-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபா் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பைத் தவறவிடுபவா்கள் தாமதக் கட்டணத்தைச் செலுத்தி அக்டோபா் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களும் தோ்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தோ்வு முடிவுகள் 2026 மாா்ச் 19-இல் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.