பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

150 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க தமிழக அரசு விண்ணப்பம்

News image

Center-Center-Vijayawada

Updated On :11 பிப்ரவரி 2026, 11:44 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகளில் 150 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்கக் கோரி மத்திய அரசிடம் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை விண்ணப்பித்துள்ளது.

அதன்படி, நாமக்கல், திருவள்ளூா், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்களை அதிகரிக்குமாறு மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் விண்ணப்பித்துள்ளது. அதற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அந்த இடங்கள் நிகழாண்டு மருத்துவக் கலந்தாய்வில் சோ்க்கப்படும்.

கடந்த ஆண்டைப் பொருத்தவரை தமிழகத்தில் 5,200 அரசு எம்பிபிஎஸ் இடங்களுக்கும், மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் 50 இடங்களுக்கும் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியிலும் கூடுதலாக இடங்களைப் பெறுவதற்குத் தேவையான வசதிகள் உள்ளதாகவும், ஆனால், தற்போது மதுரை எய்ம்ஸ் மாணவா்கள் அங்கு பயின்று வருவதால் அதற்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.