சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

உ.பி.யில் ராபர்ட் வதேரா போட்டியா?

உத்தரப் பிரதேசத்தின் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுவார்கள் என்று ஏ.கே. அந்தோனி தெரிவித்தார்.

News image

ANI

Updated On :11 ஏப்ரல் 2024, 11:59 am IST

உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனி பதிலளித்துள்ளார்.

அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வயநாட்டில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், அமேதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்றும், ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் தொலைக்காட்சிக்கு ஏ.கே. அந்தோனி அளித்த பேட்டியில், ”அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கும் வரை காத்திருங்கள். உத்தரப் பிரதேசத்தில் கண்டிப்பாக நேரு குடும்பத்தினர் போட்டியிடுவார்கள்.” என்று தெரிவித்தார்.

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, அது நடக்காத ஒன்று என்று பதிலளித்துள்ளார்.

அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிகுந்த தொகுதியாக இருந்து வந்தது. முன்னாள் பிரதமா்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி ஆகியோா் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனா். இதுபோல, கடந்த 2002 முதல் 2019-ஆம் ஆண்டு வரை இத்தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு தொடா்ந்து மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

2019 மக்களவைத் தோ்தலில் அமேதி தொகுதி மற்றும் கேரளத்தின் வயநாடு தொகுதி என இரண்டு தொகுதிகளில் ராகுல் போட்டியிட்டாா். ஆனால், அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளராக இருந்து பின்னா் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இருந்தபோதும், வயநாட்டில் வெற்றிபெற்று எம்.பி. ஆனாா்.

மேலும், ரேபரேலி தொகுதியில் 2004 முதல் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோனியா காந்தி, இம்முறை மாநிலங்களவை உறுப்பினரானார்.

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ் தங்களின் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.