பாஜக - இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் இடையே மக்களவைத் தொகுதி ஒப்பந்தம் இன்று (மர்ச் 20) கையெழுத்தானது. அதன்படி இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் இடம்பெற்றுள்ளது.
இந்த, இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு இன்று நடைபெற்றது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனும் கையெழுத்திட்டனர்.
டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 2 மக்களவைத் தொகுதிகளும், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.