
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் இன்று (பிப்.12) காலை 10 மணியளவில் தொடங்கியது.
புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றினார்.
ஆளுநர் உரையைத் தொடா்ந்து, பேரவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் இன்று நண்பகல் நடைபெறவுள்ளது. அதில், பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு நாள்கள் இறுதி செய்யப்பட உள்ளன. பிப்.19-ஆம் தேதி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சிய நிலையில், ஆளும் கட்சி, எதிா்க்கட்சிகளுக்கு இந்தக் கூட்டத் தொடா் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.