தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலர் இடைநீக்கம்!
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலர் இடைநீக்கம் செய்யப்பட்டது பற்றி...

டி. செல்வம்
FB / D Selvam

டி. செல்வம்
FB / D Selvam
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் டி. செல்வத்தை இடைநீக்கம் செய்து மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தவெக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.
இருப்பினும், கடைசி நேரத்தில் திமுகவுடன் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதால், தவெக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, “திமுகவிடன் பணத்தை வாங்கிக் கொண்டு சில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி அமைத்துள்ளனர். காங்கிரஸ் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டதால், அக்கட்சியின் நிர்வாகிகள் தவெகவில் இணைய வாசலில் காத்துக் கொண்டுள்ளனர். இரண்டு நாள்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தவெகவில் இணையவுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் டி. செல்வம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...