

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
முக்கிய அரசியல் கட்சிகளும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அதேவேளையில் தமிழகம் முழுவதும் மார்ச் 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சில தொகுதிகள் சில விஷயங்களில் தனிக்கவனம் பெறுகின்றன.
அந்த வகையில் தனித் தொகுதி இல்லாத மாவட்டங்களாக..
1. திருப்பத்தூர்
2. அரியலூர்
3. கன்னியாகுமரி
குறைந்தபட்சமாக இரண்டு தொகுதிகளைக் கொண்ட மாவட்டங்களாக..
1. பெரம்பலூர்
2. அரியலூர் ஆகியவை உள்ளன.
அதிகபட்சமாக 16 தொகுதிகளைக் கொண்ட மாவட்டமாக சென்னை விளங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.