ஐடிஐ முடித்தவர்களுக்கு தேசிய அனல்மின் நிறுவனத்தில் பணி

என்டிபிசி என அழைக்கப்படும் தேசிய அனல்மின் நிறுவனத்தின் சத்தீஸ்கர் மாநிலம் லாரா அனல்மின் நிலையம் மற்றும் மத்திய பிரதேச
Updated on
1 min read

என்டிபிசி என அழைக்கப்படும் தேசிய அனல்மின் நிறுவனத்தின் சத்தீஸ்கர் மாநிலம் லாரா அனல்மின் நிலையம் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் கடர்வாரா அனல்மின் நிலையத்தில் நிரப்பப்பட உள்ள 117 ஐடிஐ டிரெயினி, அசிஸ்டன்ட் டிரெயினி மற்றும் லேப் அசிஸ்டன்ட் டிரெயினி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: 01.11.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், பிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தட்டச்சு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேதியியல் துறையில் பி.எஸ்சி முடித்தவர்களுக்கும் மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://open.ntpccareers.net/ITI2016/files/adeng.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com