துணை ராணுவ படையில் கான்ஸ்டபிள் வேலை: 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் சிஐஎஸ்எப் என அழைக்கப்படும் மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையான துணை 
Updated on
1 min read

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் சிஐஎஸ்எப் என அழைக்கப்படும் மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையான துணை ராணுவ படைப்பிரிவில் காலியாக உள்ள சமையல்காரர், முடி திருத்துனர், துப்புரவுத் தொழிலாளர், கான்ஸ்டபிள் உள்ளிட்ட 378 பணியிடங்களை தற்காலிக பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள இந்திய ஆண் இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 378

பணி: Cook - 185
பணி: Sweeper - 94
பணி: Painter - 04
பணி: Washerman  - 31
பணி: Plumber - 02
பணி: Boot Maker - 08
பணி: Carpenter - 08
பணி: Electrician - 03
பணி: Mason - 02
பணி: Mail - 04

சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000

வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பணி சம்மந்தமாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கியின் செலான் பயன்படுத்தி செலுத்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://cisfrectt.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cisfrectt.in/Notification_english.pdf என்ற லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com