வேலை... வேலை.. வேலை... சமூக நலத்துறையின் அங்கன்வாடி மையத்தில் 478  சத்துணவு அமைப்பாளர் வேலை

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் அங்கன்வாடி அமைப்பின் சென்னையில்
வேலை... வேலை.. வேலை... சமூக நலத்துறையின் அங்கன்வாடி மையத்தில் 478  சத்துணவு அமைப்பாளர் வேலை
Updated on
1 min read

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் அங்கன்வாடி அமைப்பின் சென்னையில் காலியாக உள்ள 478 சத்துணவு அமைப்பாளர், சத்துணவு மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சத்துணவு அமைப்பாளர் 
காலியிடங்கள்: 205
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்கள் அங்கன்வாடி மையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

பணி: சத்துணவு மற்றும் சமையல் உதவியாளர்
காலியிடங்கள்: 273
தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அங்கன்வாடி மையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
   
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.03.208

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnsocialwelfare.org/documents/Cook_Assistant_Appli.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com