உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 
உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read


தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 13-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2012 காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு இன்று (செப்.28) கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி இன்று என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடை தேதி அடுத்த மாதம் 13.10.2018 தேதி இரவு 11.50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய www,tnsrbonline.org என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com