DAE வேலை: மருந்தாளுநர், சானிட்டரி இன்ஸ்பெக்டர் வேலைக்கு நாளை நேர்முகத் தேர்வு

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் அணுசக்தி துறையின் மருத்துவமனையில் நேர்முகத் தேர்வின் மூலம்
DAE வேலை: மருந்தாளுநர், சானிட்டரி இன்ஸ்பெக்டர் வேலைக்கு நாளை நேர்முகத் தேர்வு
Updated on
1 min read


காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் அணுசக்தி துறை மருத்துவமனையில் நேர்முகத் தேர்வின் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள மருந்தாளுநர் மற்றும் சானிட்டரி இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் நாளை செவ்வாய்கிழமை மற்றும் வியாழக்கிழமை (நவ.19-21) நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறவும். 

பணி: Pharmacist/B - 01

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 2 ஆண்டு பார்மசி பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 6 மாதம் பயிற்சி பெற்றிருப்பதுடன் மத்திய அல்லது மாநில அரசின் பார்மசி கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.36,270

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 19.11.2019

பணி: Technician/B(Sanitary Inspector)

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 60 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று ஒரு ஆண்டு Sanitary Inspector சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.27,495

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.11.2019

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: GSO Annexe Building, DAE Township, Kalpakkam 603 102

மேலும் முழுமையான http://www.igcar.gov.in/gso/recruitment/pharmb-techb.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com