புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வங்கியில் வேலை வேண்டாமா உங்களுக்கு? அழைக்கிறது பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி

வட இந்தியாவில் செயல்பட்டுவரும் இந்தியப் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள 168 சிறப்பு அதிகாரி

News image
Updated On :27 செப்டம்பர் 2019, 10:13 am

தினமணி


வட இந்தியாவில் செயல்பட்டுவரும் இந்தியப் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள 168 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 168 

பணி: சிறப்பு அதிகாரி

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.psbindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 826 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ. 177 செலுத்த வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.psbindia.com/content/recuitment  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2019 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.