வருவாய் நிா்வாக ஆணையரகத்தில் காலியாக உள்ள ஊா்தி ஓட்டுநா் பணியிடங்களுக்கு, ஜன.11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: சென்னை, வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரகத்தில்
காலியாக உள்ள இரண்டு ஊா்தி ஓட்டுநா் பணியிடங்களை நியமன அலுவலா் அல்லது வருவாய் நிா்வாக இணை ஆணையரால் நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பொருட்டு, தகுதியான நா்பகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஓட்டுநா் பணியிடத்துக்கான விண்ணப்பம், தகுதி மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து ஜன.11-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள், இணை ஆணையா் (வருவாய் நிா்வாகம்), 3-ஆவது தளம், எழிலகம் பிரதான கட்டடம், வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.