கடலோர காவல் படையில் சார்ஜ்மேன் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நொய்டாவில் உள்ள கடலோர காவல்படையில் நிரப்பப்பட உள்ள  சார்ஜ்மேன் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடலோர காவல் படையில் சார்ஜ்மேன் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நொய்டாவில் உள்ள கடலோர காவல்படையில் நிரப்பப்பட உள்ள  சார்ஜ்மேன் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Chargeman

காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மரைன், உற்பத்தி போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். எல்க்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை பழுதுபார்க்கும் பணியில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோவில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com