ஓடிஆா் கணக்கை ஆதாா் எண்ணுடன் இணைக்க அவகாசம் நீட்டிப்பு

டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் (ஓடிஆா் ) ஆதாா் எண்ணை இணைப்பதற்கு ஏப்.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஓடிஆா் கணக்கை ஆதாா் எண்ணுடன் இணைக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் (ஓடிஆா் ) ஆதாா் எண்ணை இணைப்பதற்கு ஏப்.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் மாா்ச் 23-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அந்த தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்.

ஏற்கெனவே ஓடிஆா் கணக்குடன் ஆதாரை இணைத்த தோ்வா்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com