ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் கிராம உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் அடங்கிய கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் கிராம உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் அடங்கிய கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: வருவாய்த் துறை, திருவள்ளூர்‌ 

மொத்த காலியிடங்கள்: 08 

பணி : கிராம உதவியாளர் 

சம்பளம்: மாதம் ரூ. 11,100 - ரூ.35,100

தகுதி: குறைந்தபட்சம் ஐந்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத்‌ தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள்‌ காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.01.2022

மேலும் விபரங்கள் அறிய tiruvallur.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/01/2022010474.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com