சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 13 ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 13 ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விளம்பர எண்: 03/2024

பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி பொதுப்பிரிவினர் 16 முதல் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, பிசிஎம் பிரிவினர்18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, பிசி,பிசிஎம், எம்பிசி, டிசி பிரிவினர் ரூ.500. இதனை இந்தியன் வங்கி செல்லானை பயன்படுத்தி செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.2.2024

மேலும் விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com