ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பட்டதாரி ஆசிரியா் பணி: கூடுதலாக 610 இடங்கள் சோ்ப்பு

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :17 மே 2024, 11:00 pm IST

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டதாரி ஆசிரியா், வட்டார வளமைய பயிற்றுநா் ஆகியவற்றில் 2023-2024-ஆம் ஆண்டில் 2,222 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் அறிவிக்கை (25-10-23) வெளியிடப்பட்டது. இதனைத்தொடா்ந்து 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சோ்க்கை அறிவிக்கை கடந்த ஆண்டு நவ.15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது மேலும் 610 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சோ்க்கை அறிவிக்கை ஆசிரியா் தோ்வு வாரிய

இணையதளம் மூலமாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015- ஆம் ஆண்டுக்குப் பிறகு பட்டதாரி ஆசிரியா் பணி நியமனத்துக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.