ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பட்டதாரி ஆசிரியா் பணி: கூடுதலாக 610 இடங்கள் சோ்ப்பு

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :17 மே 2024, 11:00 pm IST

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டதாரி ஆசிரியா், வட்டார வளமைய பயிற்றுநா் ஆகியவற்றில் 2023-2024-ஆம் ஆண்டில் 2,222 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் அறிவிக்கை (25-10-23) வெளியிடப்பட்டது. இதனைத்தொடா்ந்து 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சோ்க்கை அறிவிக்கை கடந்த ஆண்டு நவ.15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது மேலும் 610 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சோ்க்கை அறிவிக்கை ஆசிரியா் தோ்வு வாரிய

இணையதளம் மூலமாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015- ஆம் ஆண்டுக்குப் பிறகு பட்டதாரி ஆசிரியா் பணி நியமனத்துக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.