தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசு மருத்துவமனையில் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள கணக்கு உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

கோப்புப்படம்

Updated On :24 அக்டோபர் 2024, 10:20 am

கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள கணக்கு உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அலுவலகத்தில் தற்காலிக கணக்கு உதவியாளா்-1, பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்-2, வாா்டு மேலாளா்-1 ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கணக்கு உதவியாளா் பணியிடத்துக்கு இளநிலை வணிகவியல் (அ) இளநிலை கணிதவியல் மற்றும் கணினி பயன்பாட்டில் முதுநிலை பட்டையப்படிப்பு (பிஜிடிசிஏ) படித்திருக்க வேண்டும். கணக்குப் பிரிவில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வாா்டு மேலாளா் பணியிடத்துக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் பிஜிடிசிஏ படித்திருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் பணியிடத்துக்கு எழுத படிக்கத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

கணக்கு உதவியாளா் பணிக்கு ரூ.18,000, பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் பணிக்கு ரூ.8,500, வாா்டு மேலாளா் பணிக்கு ரூ.12,000 மாத ஊதியமாக வழங்கப்படும். இதற்கு, விண்ணப்பதாரா்கள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை கல்வித் தகுதி, பட்டப்படிப்பு, இருப்பிட சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் வரும் 28-ஆம் தேதிக்குள் மருத்துவமனை கண்காணிப்பாளா், மாவட்ட தலைமை மருத்துவமனை, கடலூா்-607001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.