விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீதிமன்ற அலுவலகங்களில் அலுவலக உதவியாளர் பணி

சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களிலுள்ள அரசு வழக்குகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாதிரிப் படம்
மாதிரிப் படம்
Published on
Updated on
1 min read

சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களிலுள்ள அரசு வழக்குகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Office Assistant

காலியிடங்கள்: 16

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி மற்றும் டிஎன்சி பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ரூ.50-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதப்பட்ட தபால் கவருடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Advocate General of Tamil Nadu, High Court, Chennai - 600 104

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 14.8.2025

Summary

Applications are invited for the vacant posts of Office Assistant in the Government Litigation Department in Chennai and Madurai districts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com