மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர்  வேலை
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்ட தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: செவிலியர், இடைநிலை சுகாதார செவிலியர்

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: பொது செவிலியர் பிரிவில் டிப்ளமோ, இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 50-க்குள் இருக்க வேண்டும்.

பணி: மருந்தாளுநர்( Pharmacist)

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ, இளநிலைப்பட்டம் பெற்றிருப்பதுடன் மருந்தாளுநர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஆய்வக நுட்புநர்

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.13,000

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எல்எம்சிடி, டிஎம்எல்டி தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

பணி: பல்நோக்கு பணியாளர்

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.8,500

தகுதி: குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: ஆலோசகர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து சமூகவியல், உளவியல், சமூகப் பணி, பி.எஸ்சி செவிலியர் ஆகிய ஏதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட அனைத்து பணியிடங்களும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்-1

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 25.8.2025

மேலும் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Application for the Post of Health Worker in Kanniyakumari District

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com