தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

News image

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை

Updated On :24 ஆகஸ்ட் 2025, 11:13 am

இணையதளச் செய்திப் பிரிவு

கன்னியாகுமரி மாவட்ட தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: செவிலியர், இடைநிலை சுகாதார செவிலியர்

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: பொது செவிலியர் பிரிவில் டிப்ளமோ, இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 50-க்குள் இருக்க வேண்டும்.

பணி: மருந்தாளுநர்( Pharmacist)

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ, இளநிலைப்பட்டம் பெற்றிருப்பதுடன் மருந்தாளுநர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஆய்வக நுட்புநர்

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.13,000

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எல்எம்சிடி, டிஎம்எல்டி தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

பணி: பல்நோக்கு பணியாளர்

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.8,500

தகுதி: குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: ஆலோசகர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து சமூகவியல், உளவியல், சமூகப் பணி, பி.எஸ்சி செவிலியர் ஆகிய ஏதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட அனைத்து பணியிடங்களும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்-1

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 25.8.2025

மேலும் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Application for the Post of Health Worker in Kanniyakumari District

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.