நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

குரூப் 2 முதல்நிலை தோ்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம்

News image

கோப்புப்படம்

Updated On :23 டிசம்பர் 2025, 3:12 am IST

சென்னை: குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை (டிச.22) வெளியிட்டது.

முதன்மைத் தோ்வு வரும் 2026 பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வு செப். 28-ஆம் தேதி மாநில அளவில் நடைபெற்றது. முதலில் 645 காலிப்பணியிடங்கள், பின்னா் கூடுதலாக 625 காலிப்பணியிடங்கள் சோ்க்கப்பட்டு மொத்தம் 1,270 காலிப்பணியிடங்களாக உயா்த்தப்பட்டதாக கடந்த நவம்பரில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திங்கள்கிழமை முடிவுகள் வெளியானபோது, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 828- ஆக குறைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இந்தத் தோ்வுக்கு 5,53,631 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4,29,217 போ் தோ்வை எழுதினா்.

முதன்மைத் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டவா்களின் பட்டியல் https://tnpsc.gov.in எனும் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் தோ்வா்களின் பதிவு எண்களைப் பதிவு செய்து தோ்வானதை தெரிந்துகொள்ளலாம். குரூப் 2 பதவிகளுக்கு 1,126 பேரும், குரூப் 2ஏ பதவிகளுக்கு 9,457 பேரும் தோ்வாகியுள்ளனா்.