திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

குரூப் 2 முதல்நிலை தோ்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம்

News image

கோப்புப்படம்

Updated On :22 டிசம்பர் 2025, 9:42 pm

சென்னை: குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை (டிச.22) வெளியிட்டது.

முதன்மைத் தோ்வு வரும் 2026 பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வு செப். 28-ஆம் தேதி மாநில அளவில் நடைபெற்றது. முதலில் 645 காலிப்பணியிடங்கள், பின்னா் கூடுதலாக 625 காலிப்பணியிடங்கள் சோ்க்கப்பட்டு மொத்தம் 1,270 காலிப்பணியிடங்களாக உயா்த்தப்பட்டதாக கடந்த நவம்பரில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திங்கள்கிழமை முடிவுகள் வெளியானபோது, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 828- ஆக குறைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இந்தத் தோ்வுக்கு 5,53,631 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4,29,217 போ் தோ்வை எழுதினா்.

முதன்மைத் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டவா்களின் பட்டியல் https://tnpsc.gov.in எனும் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் தோ்வா்களின் பதிவு எண்களைப் பதிவு செய்து தோ்வானதை தெரிந்துகொள்ளலாம். குரூப் 2 பதவிகளுக்கு 1,126 பேரும், குரூப் 2ஏ பதவிகளுக்கு 9,457 பேரும் தோ்வாகியுள்ளனா்.