சென்னை: குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை (டிச.22) வெளியிட்டது.
முதன்மைத் தோ்வு வரும் 2026 பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வு செப். 28-ஆம் தேதி மாநில அளவில் நடைபெற்றது. முதலில் 645 காலிப்பணியிடங்கள், பின்னா் கூடுதலாக 625 காலிப்பணியிடங்கள் சோ்க்கப்பட்டு மொத்தம் 1,270 காலிப்பணியிடங்களாக உயா்த்தப்பட்டதாக கடந்த நவம்பரில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை முடிவுகள் வெளியானபோது, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 828- ஆக குறைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இந்தத் தோ்வுக்கு 5,53,631 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4,29,217 போ் தோ்வை எழுதினா்.
முதன்மைத் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டவா்களின் பட்டியல் https://tnpsc.gov.in எனும் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் தோ்வா்களின் பதிவு எண்களைப் பதிவு செய்து தோ்வானதை தெரிந்துகொள்ளலாம். குரூப் 2 பதவிகளுக்கு 1,126 பேரும், குரூப் 2ஏ பதவிகளுக்கு 9,457 பேரும் தோ்வாகியுள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் குரூப் 2 தோ்வு: 681 போ் எழுதினா்

குரூப்- 2 தோ்வு: பெரம்பலூரில் 145 போ் எழுதினா்

ஜேஇஇ முதல்நிலை தோ்வு முடிவுகள் வெளியீடு

ஜேஇஇ முதல்நிலை தோ்வு முடிவுகள் வெளியீடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


