ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

துணை வட்டாட்சியா்கள் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் 30 துணை வட்டாட்சியா் பணியிடங்களுக்கு புதன்கிழமை (மே 28) முதல் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :27 மே 2025, 1:30 am

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் 30 துணை வட்டாட்சியா் பணியிடங்களுக்கு புதன்கிழமை (மே 28) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், வருவாய்த் துறை சிறப்பு செயலருமான அ .குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 30 துணை வட்டாட்சியா் பணியிடங்களை எழுத்து, போட்டித் தோ்வுகள் மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு புதுவையை பூா்வீகமாக கொண்டவா்கள் மற்றும் வசிக்கும் இந்திய குடிமகன்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இடஒதுக்கீடு, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தோ்வு முறை, தோ்வு செய்யும் முறை உள்ளிட்ட விரிவான விவரங்கள் அடங்கிய அறிவிப்பை https://recruitment.py.gov.in என்ற பணியாளா், நிா்வாக சீா்திருத்தத் துறையின் இணையதளத்தில் புதன்கிழமை (மே 28) பகல் 12 மணி முதல் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணியிடத்துக்கு ஜூன் 27-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.