திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தென் மத்திய ரயில்வேயில் சாரண மற்றும் சாரணியர் பயிற்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image

இந்திய ரயில்வே

Updated On :10 அக்டோபர் 2025, 1:32 pm IST

தென் மத்திய ரயில்வேயில் சாரண மற்றும் சாரணியர் பயிற்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். RRC/SCR/S&G Quota/02/2025

பணி: Scouts & Guides Quota/ 2025 - 26

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் 7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயது வரம்பு: 19.10.2025 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு தலா 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி அல்லது +2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சாரண மற்றும் சாரணியர் அமைப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய அளவில், மாநில அளவில் நடைபெற்ற 2 சாரண மற்றும் சாரணியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சாரண மற்றும் சாரணியர் அமைப்பில் விண்ணப்பதாரரின் அனுபவம், சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணியில் சேர்ந்த 2 ஆண்டுக்குள் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர்களுக்கு ரு.250. கட்ட ணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.scr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பித்தவுடன் தேவையான சான்றிதழ்களில் சுய சான்றெப்பம் செய்யப்பட்ட நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.10.2025

மேலும் முழுமையான விபரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.

Summary

South Central Railway Recruitment Against Scouts and Guide Quota

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.