தென் மத்திய ரயில்வேயில் சாரண மற்றும் சாரணியர் பயிற்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். RRC/SCR/S&G Quota/02/2025
பணி: Scouts & Guides Quota/ 2025 - 26
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் 7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயது வரம்பு: 19.10.2025 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு தலா 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி அல்லது +2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சாரண மற்றும் சாரணியர் அமைப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய அளவில், மாநில அளவில் நடைபெற்ற 2 சாரண மற்றும் சாரணியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சாரண மற்றும் சாரணியர் அமைப்பில் விண்ணப்பதாரரின் அனுபவம், சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணியில் சேர்ந்த 2 ஆண்டுக்குள் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர்களுக்கு ரு.250. கட்ட ணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.scr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பித்தவுடன் தேவையான சான்றிதழ்களில் சுய சான்றெப்பம் செய்யப்பட்ட நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.10.2025
மேலும் முழுமையான விபரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.
Summary
South Central Railway Recruitment Against Scouts and Guide Quota
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில்வேயில் ஐடிஐ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி; உதவித்தொகையுடன் அட்டகாசமான வாய்ப்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,80,000 சம்பளத்தில் ஓஎன்ஜிசி-ல் பொறியாளர், புவியியலாளர் பணி!

சாரணா் இயக்க ராஜ்யபுரஸ்காா் பயிற்சி முகாம்

இந்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



