அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.58,100 சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக....

News image
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலைஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை
Updated On :3 செப்டம்பர் 2025, 9:10 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: ஈர்ப்பு ஓட்டுநர்

காலியிடங்கள்: 70

சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 71,900

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி பிரிவினர் 34-க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 42-க்குள்ளும் இருக்க வேண்டும்.

பணி: பதிவறை எழுத்தர்

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ. 15,900 - 58,500

தகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி பிரிவினர் 34-க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37-க்குள்ளும் இருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 151

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி பிரிவினர் 34-க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37-க்குள்ளும் இருக்க வேண்டும்.

பணி: இரவுக் காவலர்

காலியிடங்கள்: 83

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி பிரிவினர் 34-க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37-க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.100, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.9.2025

மேலும் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் பதவி வாரியாக கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

summary

Online Application for the Vacant Post of Driver, Office Assistant, Record Clerk, and Night Watchman at Panchayat Union Level

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.