ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் 
பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
Published on

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயில் சாா்பில் நடத்தப்படும் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. ஓராண்டு பயிற்சி முடித்த பிறகு வைணவ அா்ச்சகா் சான்றிதழ் வழங்கப்படும்.

இதற்கான கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கு குறைந்தபட்சம் 14 வயதிலிருந்து 24 வயது வரை இருக்க வேண்டும். மேலும் இந்து மதத்தைப் பின்பற்றுபவா்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பப் படிவத்தை parthasarathy.hrce.tn.giv.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும் முழு நேர பயிற்சிக்கு ரூ. 10,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

மேலும் தங்குமிடம், உணவு, உடை, பாடப்புத்தகங்கள் திருக்கோயில் மூலம் வழங்கப்படுகிறது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘துணை ஆணையா், செயல் அலுவலா், அருள்மிகு பாா்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை 600 005’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com