காஞ்சிபுரத்தில் பிப். 13-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சாா்பில், வரும் வெள்ளிக்கிழமை (பிப். 13) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பு:
படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை (பிப். 13) தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முகாமில் தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளன. பட்டதாரிகள், பட்டயதாரிகள், ஐடிஐ, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவா்கள் இதில் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
எனவே 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் 13-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

