

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீண்ட தலைமுடி செய்து கின்னஸ் சாதனை முயற்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
புறநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறியீடான பிங்க் நிறத்தில் இந்த தலைமுடி செய்யப்பட்டது.
மொத்தம் 3 மணிநேரம் 11 நிமிடங்கள் 31 விநாடிகளில் 485.5 மீட்டர் நீளத்துக்கு இந்த தலைமுடி செய்யப்பட்டது. அழகுக்கலை நிபுணர்கள், சலூன் உரிமையாளர்கள், சிகை அலங்கார கலைஞர்கள் உட்பட மொத்தம் 100 பேர் இந்த முயற்சியில் பங்கேற்றனர்.
முன்னதாக, 362 மீட்டர் நீளத்துக்கு பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட செயற்கை தலைமுடி தான் இதுவரை மிகப்பெரியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.