பாகிஸ்தானில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம் இருந்த இடத்தில் சுமார் 300 மொபைல் இணைப்புகள் செயல்பட்டு வந்ததாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
பாகிஸ்தானில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை இந்திய விமானப் படை செவ்வாய்க்கிழமை குண்டு வீசித் தகர்த்தது. ஆனால், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக எதிர்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. மேலும் அதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
பாகிஸ்தானில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை இந்திய விமானப் படை அழிப்பதற்கு முன்பாக அங்கு சுமார் 300 மொபைல் இணைப்புகள் செயல்பட்டு வந்ததாக தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி குழுமம் (என்.டி.ஆர்.ஓ) தெரிவித்துள்ளது. இந்த மொபைல் இணைப்புகள் ஒன்றும் அங்கிருந்த மரம், செடி, கொடிகளுக்கு வழங்கப்பட்டதில்லை.
எனவே, இதன்மூலம் எத்தனை பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டிருப்பார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், என்.டி.ஆர்.ஓ மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் எதிர்கட்சிகள் தெரிவிக்கும் என்பது எனக்கு தெரியும்.
இன்னும் சில நாட்களில் எத்தனை பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் வீழ்த்தப்பட்டார்கள் என்ற முழுவிவரம் தெரியவரும். தேசத்தின் பாதுகாப்பில் மத்திய அரசு என்றும் மெத்தனமாக செயல்படாது. மேலும் ஆட்சியை திரும்ப அடைய வேண்டும் என்ற பேராசையும் பாஜக-வுக்கு கிடையாது. அனைவருக்கும் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேச மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அதற்காக முன்வர வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா-இஸ்ரேல் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

கொள்முதல் செய்த நெல்லுக்கு ரூ.24.23 கோடி பாக்கி: விவசாயிகள் வேதனை தீா்க்கப்படுமா?

திருச்சி என்ஐடி வளாக நோ்காணலில் 80% மாணவா்களுக்கு வேலை! முந்தைய ஆண்டைவிட 5% குறைவு!

ஜூலை மலா்களால் அதிகரித்த வண்ணத்துப் பூச்சிகள்!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



