ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலய வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து 6-ஆம் நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. 2020 ஆங்கிலப் புத்தாண்டு நாளான இன்று நம்பெருமாள் புஜகீர்த்தி சவுரி கொண்டை, வைர அபய ஹஸ்தம், லட்சுமி பதக்கம், கையில் தங்க கிளி, முத்துச்சரம், பவள மாலை, காசு மாலை ஆகிய திரு ஆபரணங்களுடன் அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.