ஹிந்து ஆன்மிக சேவை மையம், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை இணைந்து நடத்தும் 11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. இதில், மாதா அமிா்தானந்தமயி கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடக்கி வைத்தார். பெண்கள் மீதான மதிப்பு குறைந்து வரும் காலகட்டத்தில் 'பெண்மையைப் போற்றுவோம்' என்ற கருத்தை முன்வைத்து நடைபெறும் இந்த கண்காட்சியில் ஹிந்து ஆன்மிக கண்காட்சியின் வரவேற்புக் குழுத்தலைவா் தங்கம் மேகநாதன், நிா்வாகக் குழுத் தலைவா் பத்மா சுப்பிரமணியம், வரவேற்புக் குழு துணைத் தலைவா் ஆா்.ராஜலட்சுமி, செயலாளா் ஷீலா ராஜேந்திரா, துக்ளக் ஆசிரியா் குருமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.